<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-11870784</id><updated>2011-07-07T16:05:49.079-07:00</updated><title type='text'>அங்குசம்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://ankusam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://ankusam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>தெய்வீகன்</name><uri>http://www.blogger.com/profile/16880283989260916474</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>15</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-11870784.post-111616866952903840</id><published>2005-05-15T07:47:00.000-07:00</published><updated>2005-05-15T07:51:09.536-07:00</updated><title type='text'>குமுதினி படுகொலை</title><content type='html'>நெடுந்தீவு ! &lt;br /&gt;&lt;br /&gt;அதுயாழ் குடாநாட்டின் நகர மையத்திற்கு மேற்கே 34 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ஒரு அமைதியான தீவு. 10 சதுர மைல்கள் பரப்பினைக் கொண்ட தீவில் 1955ம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் பிற இடங்களில் இருந்து குடியேறி தமது வாழ்வினை ஆரம்பித்தனர். இப்போது பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்களையும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் கோரமான பதிவுகளையும் தன்னுள் சுமக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக இங்கு வாழும் மக்கள் தமது வாழ்வோடு ஒன்றித்துப்போன தேவைகள் சார்ந்தவற்றில் தன்னிறைவு கொண்டிருக்கவில்லை. தேவைகளின் பெரும்பாலானவை யாழ்குடா நாட்டுடன் தொடர்பு பட்டிருந்த தீவகத்தின் குறிகட்டுவான் எனும் இடத்திற்கு சென்று நிறைவு செய்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;தீவையும் குறிகட்டுவானையும் பிரித்து இருந்த ஒன்பது மைல் தொலைவு கடலாகியிருந்ததால் தீவுக்கான அனைத்து தொடர்புகளும் கடல் மார்க்கமாகவே நிகழ்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் தமது அன்றாட கடல் மார்க்கமான போக்குவரத்து 'குமுதினி" என்ற பெயர் கொண்ட படகு மூலமே மேற்கொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;குமுதினி....! தீவு வாழ்மக்களின் வாழ்வோடு ஒன்றித்துப்போன ஒரு இணைபிரியா அம்சமாகிப் போயிருந்தது. நாளுக்கு இரண்டு தடவை தீவின் மக்களை சுமந்து செல்லும் குமுதினி தீவின் நாளாந்த இயக்கத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உயிர் நாடியாக உயர்ந்து நின்றது. அன்று தீவின் மக்களுக்காக வாழ்ந்த குமுதினி இன்று அரச பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியாகி உயர்ந்து நிற்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;15.05.1985 .......!&lt;br /&gt;&lt;br /&gt;அன்றுதான் தீவு பூபாளத்தின் இனிமையை இறுதியாக சந்தித்தது. அதன் பின்பு வந்தவைகள் எல்லாம் சோகத்தின் முகாரியாகவே கழிந்தது. அன்றைய காலைப் பொழுதில் குமுதினியும் வழமை போன்று தனது பணிக்கு தயாராகியது. எப்போதும் போலவே எதிர்பார்ப்புகளாலும் தம்மைச் சுற்றிய நினைவுகளாலும் மனங்களை நிறைத்த மக்கள் கூட்டம் குமுதினியையும் நிறைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நேரம் காலை ஏழுமணியினைக் கடந்து கொண்டிருந்தது. காலைப் பொழுதின் இனிமை கடற்காற்றின் இதம் கடல் நீரின் உப்புச்சாரல் எல்லாமே ஒன்றாகி மனதின் உணர்வுகளை மென்மையாக்கி நினைவுகளை அகல விரித்தது. இயற்கையின் அரவணைப்பில் சுயத்தின் சோகங்கள் தற்காலிகமாகவேனும் மறந்து இருந்தனர் மக்கள். ஆனால் அந்த அமைதி நீடிக்கவில்லை.அமைதியைக் குலைத்து இறங்கு துறையினை வந்தடைந்த படையினர் குமுதினியை சல்லடை போட்டுத் தேடினர். பயணிகள் கடுமையான விசாரணைக்குள்ளாகினர். சற்று நேரத்தின் முன்பு நிலவிய அமைதி இப்போது பதட்டமாக மாறியது. &lt;br /&gt;&lt;br /&gt;முன்பு பல தடவை இத்தகைய கசப்பான அனுபவப் பதிவுகளுக்கு சொந்தமாகிப் போனவர்கள். பழையனவற்றுடன் இதனையும் வரவு வைத்துக் கொண்டனர்.ஆனால் அன்றைய நிகழ்வு மாறானதாகவே அமைந்தது.இருப்பினும் தமக்கு நிகழப்போகும் அனர்த்தம் எதனையும் அப்பாவியான அவர்களால் அறிந்திருக்க நியாயம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;படையினரின் கெடுபிடிகள் முடிவுக்கு வந்த போது குமுதினி தனது பயணத்துக்கான நேரத்தை தவறவிட்டிருந்தது. இருந்தும் காலை 8.30 மணியளவில் தீவின் இறங்குதுறையில் இருந்து குமுதினி விடைபெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்ப்பரித்தெழுந்த நீலக்கடலலை மெல்லக் கடந்த குமுதினியைப் பார்த்து இறங்குதுறை மௌனமாகி நின்றது.தினமும் நிகழும் இப்பார்வையின் மௌனம் அன்று மட்டும் கனதியாகி இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்ப்பரித்தெழுந்த கடலின் மடியில் குமுதினி சென்று கொண்டிருந்தது. வெள்ளைக் கொக்குகள் குமுதினிக்கு மேலாக பறந்து தமது பார்வையினை விரித்து விட்டுப் போயின. சூரியனின் ஒளிக்கீற்று அன்று சற்று வெப்பமாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நயினைக் கடலில் குமுதினி சென்று கொண்டிருந்தது. அப்போதுதான் கடலம்மாவின் இதயத்தைக் குதறியவாறு சிறீலங்காவின் கடல் வல்லூறுகள் வந்து கொண்டிருந்தது. குமுதினியின் கண்களுக்குத் தெரிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;எதனையுமே விபரீதமாக பார்க்கத் தெரியாத ஏதுமறியா அப்பாவிகளின் பயணம் தொடர்ந்தது. தூரத்தில் தெரிந்த கடல் வல்லூறுகள் இப்போது குமுதினியை நோக்கிப் பாய்ந்து வந்தன. தாய் வல்லூறுக்குத் துணையாக வந்திருந்த இரண்டு வல்லூறுகள் வேகமாக வந்து குமுதினியை வழிமறித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்ப்பரித்தெழுந்த கடல் மாதாவின் மடியில் குமுதினி மௌனமாகியது. கடல் மாதாவின் இதயத்தைக் குதறிய தாய் வல்லூறு குமுதினியை நெருங்கி வந்து கொலை வெறிபிடித்த கொடுரமான தனது பார்வையால் குமுதினியை குதறியது. பார்வையின் கொடுரத்தைப் பொறுக்காத கடலம்மா தனது அலைக்கரங்களால் ஓங்கியறைந்து கரைகளில் வந்து மோதினாள். இருந்தும் வல்லூறு பணியாது கோபம் கொண்டு ஆடியது.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழப் போகும் விபரீதத்தினை உணர்ந்து கொண்ட பயணிகள் நிதானிப்பதற்கிடையில் அது நிகழ்ந்தது. தாய் வல்லூறு குமுதினியை வழிமறிக்க குட்டி வல்லூறுகளில் இருந்து கறுப்பு நிற உடையணிந்த பேய்கள் கைக்கோடாரிகள் , வாள் , இரும்புக் கம்பிகள் போன்ற கூரிய ஆயுதங்களுடன் குமுதினியுள் பாய்ந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;தமது அன்றாட வாழ்வின் தேவை தேடி கடல் வழியில் பயணிப்பவர்களால் என்னதான் செய்யமுடியும் ? கடல் பேய்களிடமிருந்து தப்பிப்பதற்கு வழி ஏதும் அங்கு இருக்கவில்லை.கடல் ஆர்ப்பரித்துக் கொண்டது. அப்பாவிப் பயணிகளால் ஏதும் இயலாது போனது.தமது இயலாமையினை நாம் அப்பாவிகள் எம்மை ஒன்றும் செய்யாதீர்கள் என அவலக்குரல் எழுப்பினர்.ஆனால் கொலை வெறிபிடித்த கடல் பேய்கள் முன்னால் கதறல்களும் புலம்பல்களும் தோற்றுப் போயின. &lt;br /&gt;&lt;br /&gt;கொச்சைத்தமிழின் உச்சரிப்பில் உரக்க நாமம் எழுப்புமாறு கடல் பேய்களிடம் இருந்து கட்டளை பிறந்தது.அப்பாவிப் பயணிகள் கொடுரமான ஆயதங்கள் முன்னால் பெற்றோரும் சுற்றத்தாரும் கூடி பெருமையுடன் சு10ட்டிய நாமத்தினை தயங்கித் தயங்கி கூனிக்குறுகி உச்சரிக்க அந்தக் கொடுரம் நிகழ்ந்தேறியது. &lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர்கள் முன்னால் பின்ளைகள்,பிள்ளைகள் முன்னிலையில் பெற்றோர்கள்,சகோதரர்கள் முன்னிலையில் சகோதரிகள் துடிக்கத் துடிக்க கொலை வெறி கொண்ட கடற்பேய்களின் கூரிய ஆயதங்களினால் வெட்டியும் குத்தியும் குதறப்பட்டு சரிக்கப்பட்டனர். சரிந்தவர்கள் பலர் கடலுக்கு இரையாகினர். &lt;br /&gt;&lt;br /&gt;குமுதினியில் இருந்து எழுந்த எம் உறவுகளின் மரண ஓலம் எவருக்கும் தெரியாது அன்று வீசிய சோளகக்காற்றுக்குள் சுற்றி சுழன்று போனது.புத்த பெருமானின் வழித்தோன்றல்களால் எம் உறவுகள் குதறப்பட்ட அந்த இறுதிக்கணம் பச்சிளம் பாலகி சுபாஜினி விஸ்வலிங்கம் எதைத்தான் எண்ணியிருப்பாளோ....? என்ன நிகழ்கிறது என்பது எதனையும் அறிந்திராத அந்த பிஞ்சு மழலை இந்த உலகத்தினை கண் திறந்து பார்த்து ஏழு மாதங்கள் மட்டுமே நிரம்பியிருந்தது.அந்த மழலையால் கூட அன்பையும் அறநெறியையும் போதித்த புத்த பெருமானின் வாரிசுகளான அவர்களிடமிருந்து எதனையும் பெறமுடியாது போனது. ஏதும் அறியாத இந்த மழலை மேனியும் முக்கூர் முனை கொண்ட ஆயதத்திற்குப் பலியாகிப்போனது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றரை மணி நேரமாக குமுதினியைக் குதறியவர்கள் நடுக்கடலில் கைவிட்டு அங்கிருந்து மறைந்தனர். முன்பெல்லாம் தீவின் மக்களை சுமந்த குமுதினி அன்று அவர்களின் குருதியையும் சுமந்தது. குமுதினியில் இருந்து வடிந்த குருதியினால் கடல் அன்னை சிவப்பாகிப் போனாள். &lt;br /&gt;&lt;br /&gt;உச்சத்தில் நின்றிருந்த சு10ரியனும் நயினையில் வீற்றிருந்த புத்தபகவானும் நடுக்கடலில் நிகழ்ந்த கொடுரத்தினை மனதினுள் புதைத்துக் கொண்டு மௌனமாகினர். &lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் காலையிலேயே குறிகட்டுவான் இறங்கு துறையினை வந்தடையும் குமுதினி அன்று வரவில்லை. மதியத்தில் பிறிதொரு படகின் துணையுடன் வந்தடைந்த போதும் அவசர அவசரமாக வெளியேறும் மக்கள் கூட்டத்தினை அன்று காணவில்லை. அவர்கள் சடலங்களாக மட்டுமே வந்து இருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;குமுதினி மௌனமாகிப் போனதால் தனிமையான தொலை தீவில் வாழ்ந்த மக்களுக்கு தமது உறவுகளின் மரணங்கள் கூட கிட்டாது போனது. &lt;br /&gt;&lt;br /&gt;பலநூற்றாண்டுகளுக்கு முன்பு தர்மத்தின் முறையிலும் நீதியின் சார்பாகவும் திகழ்ந்து இலங்கையினை ஆட்சி புரிந்த தமிழர்களின் மன்னன் எல்லாளன். அந்த உத்தமனின் நாமத்தினை நினைவாக்கும் எல்லாரா எனும் பெயர் கொண்ட கப்பலினையே இப்பாதக செயலுக்கு சிங்கள அரச பயங்கரவாதம் பயன்படுத்தி எல்லாளனின் நாமத்தில் அழியாத வடுவினையும் பதிவாகியது. சிங்களத்தின் ஆட்சியாளரின் ஆசீர்வாதத்தோடு காரைநகர் கடற்படைத் தளத்தில் இருந்து வந்திருந்த கடல் பேய்களின் கப்டன் யு.ஐ.ஜெயவர்த்தனா தலைமையில் நிகழ்த்தப்பட்ட படுபாதகத்தில் 7 மாதப்பச்சிளம் பாலகி சுபாஜினி விஸ்வலிங்கம் 70பது வயது தெய்வானையோடு 36 அப்பாவி பயணிகள் குமுதினியில் சடலங்களாகவும் 71 பயணிகள் மரண காயங்களோடும் மீட்கப்பட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;கசப்பான அந்த அனுபவப் பதிவில் உயிர்பிழைத்தோர் நிகழ்ந்த கொடுரங்களை பக்கம் பக்கமாக அறிக்கைகளாக உலகுக்கு வெளிப்படுத்தினர்.ஆனாலும் அடைந்த பலன் ஏதும் அல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;உலகமும் கொடுரங்களாக நோக்காது வெறும் அறிக்கைகளாகவே நோக்கியது. துயர வடுக்களைச் சுமந்த மக்களுக்கு நிகழ்ந்த மற்றும் ஒரு அவலமாக அமைந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;20 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களின் மனங்களில் பதிவாகிய மனது நினைக்க மறுக்கும் அன்றைய நாளினை ஒரு தடவை மீண்டும் நினைத்துப் பார்க்கிறோம்.... &lt;br /&gt;&lt;br /&gt;ஓவென ஆர்ப்பரித்தெழும் நயினைக்கடலும் வேகமாக சுழன்றடித்து வீசும் சோளகக் காற்றும் இன்றைய நவீன உலக ஒழுங்கிற்கு புரியாத செய்தி ஒன்றைச் சொல்லுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உலகமே உங்களுக்கு குமதினியைத் தெரிகிறதா....? &lt;br /&gt;&lt;br /&gt;நீலக்கடல் ஏன் சிவப்பானது எனப் புரிகிறதா...? &lt;br /&gt;&lt;br /&gt;கண்திறந்து ஏழு மாதங்களே நிரம்பிய பச்சிளம் பாலகி சுபாஜினியைத் தெரிகிறதா...? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;20ஆண்டுகளுக்கு முன்னர் தீவின் நாளாந்த இயக்கத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உயிர் நாடியாகி உயர்ந்து நின்ற குமுதினி 20 ஆண்டு கடந்தும் இன்னும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியாக உயர்ந்து நிற்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:ஈழவர் குரல்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11870784-111616866952903840?l=ankusam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ankusam.blogspot.com/feeds/111616866952903840/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11870784&amp;postID=111616866952903840' title='53 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111616866952903840'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111616866952903840'/><link rel='alternate' type='text/html' href='http://ankusam.blogspot.com/2005/05/blog-post_15.html' title='குமுதினி படுகொலை'/><author><name>தெய்வீகன்</name><uri>http://www.blogger.com/profile/16880283989260916474</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>53</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11870784.post-111502833935433859</id><published>2005-05-02T03:02:00.000-07:00</published><updated>2005-05-02T07:30:28.290-07:00</updated><title type='text'>மாமனிதர்விருது</title><content type='html'>தமிழ்ம்களின் போராட்ட நியாயப்பாடுகளை உலகெங்கும் ஓங்கி ஒலித்த ஊடகவியலாளர் சிவராமுக்கு விடுதலைப்புலிகளின் தேசியத்தலைவர் பிரபாகரன் மாமனிதர் விருது வழஙஙகி கௌரவித்திருக்கிறார். ஊடகப்பணியிலிருந்து அவர் ஆற்றிய தேசியப்பணிக்கு தமிழ்மக்களின் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img border='0' style='border:2px solid #006600; margin:2px' src='http://photos1.blogger.com/img/110/5527/200/sivaram.jpg' align="left" vspace="5" hspace="5"&gt;தமிழ்மக்களின் விடிவுக்காக இளம்பராயத்திலேயே போராடப்புறப்பட்ட சிவாராம்,விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமையே தமிழ்மக்களின் போராட்டத்துக்கு சரியானது என்ற கொள்கையுடன் தமிழ்த்தேசியப்போராட்டத்தை ஊடகத்துறை ஊடாக மககளுக்கு விளக்கினார்.ஈழப்போராட்டத்துக்கு இழைக்கப்படும் அநீதியை எழுத்துக்களால் எதிர்த்தார்.மக்களின் அரசியல் விழிப்புணர்வுக்கும் விடிவுக்கும் விடுதலைக்கும் அரும்பாடுபட்டார்.சர்வதேச அரங்கிலும் சாமர்த்தியமாக இச்செயற்பாட்டை சாமர்த்தியமாக மேற்கொண்டுவந்தார்.அவரது இப்பணியை-போராட்டத்தை கௌரவித்த அவருக்கு விடுதலைப்புலிகளால் இவ்வுயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளால் வழங்கப்படும் இந்த விருது குறித்து பல்வேறு விமர்சனங்களும் விளக்கமின்மைகளும் அவ்வப்போது ஆங்காங்கே சில வட்டஙகளில் காணப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மக்களின் வாழ்நிலை மேம்பாட்டுக்காக-உரிமை விடுதலைக்காக-விடுதலைப்போராட்டத்துக்காக அரும்பாடுபடும் தமிழருக்கு மாமனிதர் என்ற இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.மாமனிதர் விருது பெறுபவர் புலிகள் உறுப்பினராகவோ அல்லது புலிகளின் ஆதரவாளராகவோ இருக்கவேண்டும் என்று புலிகள் நிபந்தனை விதிக்கவில்லை.கட்டுப்பாடுபோடவில்லை. உண்மையில் ஈழத்தமிழரின் விடிவுக்காக பாடுபடுபவர்களின் பெயரை தேர்ந்தெடுத்து புலிகளின் உயர்மட்டக்குழு தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு சிபார்சு செய்யும். பிரபாவின் தலைமையில் கூடும் அம்முக்கிய குழு தேர்வு செய்யப்பட்டவர் குறித்து பரிசீலித்து பின்னர் முடிவெடுத்து அவரை விருதுக்கு உரியவராக அறிவிக்கும்.இதேபோலவே நாட்டுப்பறறாளர் என்ற விருதும் வழங்கப்பட்டுவருகிறது.மறைந்த பத்திரிகையாளர் நடேசனுக்கு நாட்டுப்பற்றாளர் விருது வழங்கப்பட்டது.முன்னாள் ஈழநாடு ஆசிரியர் கோபு எனப்படும் கோபாலரட்ணம் போன்றோருக்கு தலைவர் பிரபாகரனின் கௌரவ விருது வழங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறு மாமனிதர் விருதுவழங்கப்பட்டவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1. காசி ஆனந்தன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;img border='0' style='border:2px solid #006600; margin:2px' src='http://photos1.blogger.com/img/110/5527/200/kasi.jpg' align="left" vspace="5" hspace="5"&gt;&lt;br /&gt;மட்டக்களப்பை சொந்த இடமாகக்கொண்ட காசி ஆனந்தன் ஈழத்துக் எழுச்சி கவிஞராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர்.இளைஞனாக இருந்த காலத்திலேயே சிங்கள ஆதிக்க வெறியர்களினதும் அரசினதும் அடக்குமுறைகள் மற்றும் ஆட்சிநடைமுறைகளுக்கு எதிராக போராட்டம் செய்தவர்.தனிச்சிங்களச்சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம் செய்து சிறை சென்றவர்.வாகன இலக்கத்தகடுகளிலேயே சிங்கள எழுத்துக்கள் இருக்கக்கூடாது என்று அவற்றை அகற்றும் போராட்டத்திலும் பாடசாலை பெயர்பலகைகளில் சிங்கள மொழி இருக்கக்கூடாது என்றும் போராட்டம் செய்து பொலீஸாரால் கைதாகி சிறையில் சித்திரவதை அனுபவித்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் இந்தியா சென்று அங்கு பெரியாருடன் இணைந்து செயற்பட்டு பின்னர் இலங்கை வந்து ஈழத்தமிழர்களின் எழுச்சிக்கு துணைநின்றார்.அப்போது இவரது செயற்பாடுகளால் வெறுப்படைந்த ஸ்ரீலஙகா பொலீஸார் இவரை கைது செய்தனர்.இவர் ஸ்ரீலங்காவிலுள்ள ஐந்து சிறைகளில் சுமார் ஐந்துவருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான காலப்பகுதியில் பேச்சுக்களுக்காக புலிகள் இந்தியா சென்றபோது காசியும் இந்தியா சென்றார்.புலிகளின் அரசியல்விவகாரக்குழுவின் மத்ததிய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அக்காலப்பகுதியில் இந்தியாவில் ராஜீவ் அரசுடனான பேச்சுக்குழுவில் புலிகள் தரப்புபிரதிநிதிகளில் ஒருவராக காசி சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் தமிழகத்திலேயே தங்கிவிட்ட காசி ஆனந்தன் இன்றும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக அங்கு குரல்கொடுத்தவண்ணமுள்ளார்.ஈழப்போராட்ட காலத்தின் இக்கட்டான காலப்பகுதிகளில் தோளோடு தோள் நின்ற இந்த எழுசச்சிக்கவிஞனுக்கு தேசியத்தலைவர் பிரபாகரன் மாமனிதர் விருது வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2. குமார் பொன்னம்பலம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;img border='0' style='border:2px solid #006600; margin:2px' src='http://photos1.blogger.com/img/110/5527/200/kumar_tc.jpg' align="left" vspace="5" hspace="5"&gt;&lt;br /&gt;குமார் பொன்னம்பலம் அவர்கள் ஒரு பிரபல சட்டமேதையாக தன்வாழ்க்கையை நடத்தினாலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவவாக கொழும்பிலிருந்து அரசுடன் மோதியவர்.நாடாளுமன்ற பதவிகளுக்காக தமது கொள்கைகளை விற்று அரசியல்நடத்தம் தலைநகரின் அரசியல்பாரம்பரியத்துக்கு மத்தியில் ஒரு தனிமனிதனானக நின்றுபோராடியவர்.அவர் ஒரு போராளியாகவே அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராகவோ இல்லாதபோதும் தமிழ்மக்களின் பிரச்சினையை பேச தனக்கு தானே துணை என்ற துணிவுடன் சாதித்தவர்.இலங்கையில் மட்டுமல்ல ஐ.நா.சபையிலேயே ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்தவர்.இவரது கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள இயலாதவர்கள் இவரை துப்பாக்கிக்கு இரையாக்கினர்.சிவராமைப்போலவே தனக்கு முடிவு இதுதான் என்று தெரிந்தும் சிங்கத்தின் குகைக்குள் இருந்துகொண்டு சிங்கத்துடன் சவாலிட்டு சாகும்வரை தமிழனுக்காக தமிழனின் உரிமைக்காக தமிழர்களின் போராட்ட நியாயப்பாடுகளுக்காக குரல் கொடுத்து மடிந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3. கணிதமேதை எலியேசர் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;img border='0' style='border:2px solid #006600; margin:2px' src='http://photos1.blogger.com/img/110/5527/200/cj_eliezer_04.jpg' align="left" vspace="5" hspace="5"&gt;&lt;br /&gt;கணிதமேதை எலியேசர் அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டல் மீதும் போராட்டத்தின் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டு அதற்காக தொடர்ந்து குரல்கொடுத்து வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1918 ம் ஆண்டில் தமிழீழத்தில் பிறந்த பேராசிரியர் கணிதவியலில் கலாநிதி பட்டமும் பெற்று கணித மேதையாக திகழ்ந்த நாட்களில் இவருக்குக் கிடைத்த சர்வதேச விருதுகள் பல.இவரது பெயரிலேயே 1948 வெளியிடப்பட்ட "எலியேசர் தேற்றம்" கணிதவியலில் இன்றும் பிரயோகிக்கப்படும் தேற்றமாகும்.ஆஸ்திரேலியாவிலிருந்துகொண்டு ஈழத்தமிழ்மக்களின் விடிவுக்காகவும் விடுதலைக்காகவும் குரல் கொடுத்து அரும்பாடுபட்டவர்.தமிழ்மக்களின் போராட்டத்தின் நியாயத்தை ஆஸ்திரேலிய அரசு மட்டத்தில் எடுத்துச்சென்று பேசியவர். இவருக்கு 1997 ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களால் " மாமனிதர் " விருது வழங்கப்பட்டது முதல் முறையாக இவ் விருது தமிழீழத்துக்கு அப்பால் வாழும் ஒரு தமிழருக்கு வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4. அரியநாயகம் சந்திரநேரு &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;img border='0' style='border:2px solid #006600; margin:2px' src='http://photos1.blogger.com/img/110/5527/200/ariyanayagam_chandra_nehru.jpg' align="left" vspace="5" hspace="5"&gt;&lt;br /&gt;வடக்கு கிழக்கில்  மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்ட செயல்வீரர் அரியநாயகம் சந்திரநேரு.வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலக உறுப்பினரான இவர் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு,சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட பல பன்னாட்டு மனிதஉரிமைகள் அமைப்புக்களுடன் தமிழ்மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித உரிமைமீறல்கள் நிறுத்தப்படவேண்டும்.ஸ்ரீலங்கா படைகளால் சிறைப்படுத்தப்பட்டுள்ள அப்பாவி தமிழ்மக்கள் விடுவிக்கப்படவேண்டும் என பேச்சுநடத்தினார்.இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவிவகித்து அயராது சமூகசேவை ஆற்றியவர்.இவர் வன்னியிலுள்ள வடக்கு கிழக்கு மனிதஉரிமைகள் செயலகத்தின் கூட்டத்துக்கு சென்றுவிட்டு அம்பறைக்கு திரும்பிக்கொண்டிருக்கையில் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் கௌசல்யனுடன் வைத்து பொலநறுவ வெலிக்கந்தையில் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.வாழநாளில் இவர்புரிந்த சேவைகளை கௌரவிக்கும் முகமாக இவருக்கு தேசியத்தலைவர் பிரபாகரன் மாமனிதர் விருதுவழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5. கலைஞானி செல்வரட்ணம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேசியத்தவைர் பிரபாகரனால் மாமானிதர் வழங்கப்பட்ட இன்னுமொருவர் கலைஞானி செல்வரட்ணம்.இவர் காலைஞானி எல்லோராலும் அழைக்கப்பட்டுவந்தார்.ஈழத்தின் தொல்பொருட்சான்றுகளை சேகரித்த அவற்றை வருங்கால சந்ததிக்க வரலாறாக ஆதாரப்படுத்தும் பணி இன்றும் நினைவுகூரப்படுகிறது.எத்னையோ வரலாற்றுச்சின்னங்கள் தெர்லபொருட்கள் ஆதார அபூர்வங்கள் ஆகியவற்றை தேடி எடுத்து அவற்றை ஆவணப்படுத்தி ஈழத்தின் வரலாற்று இருப்பை ஆதாரபூர்வமாக நிரூபித்தவர்.தன் வாழநாளில் 55 வருடங்களாக தனியாளாக இப்பணியில் ஈடுபட்டுவந்தார்.யாழ்ப்பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப்பேராசிரியர்களும் இன்றும் இவரது பணியை பாராட்டி இவரைப்பற்றியே ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குரும்பசிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட இவர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை வதிவிடமாகக்கொண்டிருந்தார்.1995 இடப்பெயர்வின்போது இடம்பெயர்ந்து நாவற்குழிப்பகுதியில் தங்கியிருந்தார்.அக்காலப்பகுதியில் இராணுவம் குடாநாட்டின்மீது மேற்கொண்ட ரிவிரச இராணுவ நடடிவடிக்கையின்போது இவர் பாடுபட்ட சேகரித்த அரும்பொருட்கள் பலவும் இராணுவத்தால் அழிக்கப்பட்டுவிட்டன.இவருக்கு தேசியத்தலைவர் 1991 ஆம் ஆண்டு மாமனிதர் விருதுவழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;6. சிரித்திரன் சுந்தர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்களை சிரிக்கச்செய்து அதில இன்னபம் காணும் ஒரு மனிதராக வலம்வந்த ஈழத்து படைப்பாளி சிரித்திரன் சுந்தர் எனப்படும் சிவஞானசுந்தரம்.செய்தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம் என்பதை தாரகமந்திரமாகக்கொண்டு நகைச்சுவை உணர்வை மக்களுக்கு கொண்டு செல்லும் அரிய படைப்பாளி சிரித்திரன் சுந்தர்.ஈழத்தில் இவரை அறியாதவர்கள் எவருஅம இல்லை என்று கூறுமளவுக்கு பிரபலமான கேலிச்சித்திர வரைஞர்.ஈழத்துக்கு அப்பாலும் இவரது புகழ்கொடிகட்டிப்பறந்தது.45 வருடங்களாக கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையை வெளிப்படுத்திய சுந்தர் சுமார் 15000 கேலிச்சித்திரங்களை வரைந்துள்ளார்.1963 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிரித்திரன் சஞ்சிகை இவரது மறைவுவரை சுமார் 32 வருடங்கள் வெளிவந்து ஈழத்து நூல் வரலாற்றிலும் இடம்பிடித்துக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;7. அருணாசலம் ஐயா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தலைவரின் மாமனிதர் விருதுபெற்ற இன்னொருவர் குறிப்பிடத்தக்கவர்.அதாவது சாதாரண பிரஜை ஒருவரும் தனது ஒப்பற்ற சேவையின் மூலம் மாமனிதர் விருதுக்கு தகுதிபெறலாம் என்பதற்கு உதாரணமானவர் இவர்.இவரது பெயர் அருணாசலம்.மாங்குளம் அருணாசலம் ஐயா எனப்படும் இவர்.மாங்குளத்தில் கமச்செய்கை மேற்கொண்டுவந்த சாதாரணமனிதர்.&lt;br /&gt;&lt;br /&gt;1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் இராணுவத்தின் மாங்குளம்முகாம் தாக்கி அழிக்கப்பட்டபோது அதிலிருந்து தப்பிஓடிவந்த சிப்பாய் ஒருவர் பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்தமுயன்றான்.அப்போது அவனைசந்தித்த அருணாசலம் ஐயா அவனை வவுனியாவுக்கு கூட்டிச்சென்று இராணுவத்தின்பகுதிக்குள் பாதுகாப்பாகவிட்டுவிடுவதாகக்கூறி வேறுஒருபாதையில் அழைத்துச்சென்றார்.சிறிதுதூரம்சென்றதும் தான்பிழையானவழியில் ஏதோ ஒரு வலையில்மாட்டப்படவே அழைத்துச்செல்லப்படுவதாக உணர்ந்த சிப்பாய் அருணாசலம் ஐயாவை சுட்டுக்கொல்லமுயன்றபோது சிப்பாயிடமிருந்த கிரனேட்டைப்பறித்து சிப்பாயைக்கட்டிப்பிடித்தவாறே வெடிக்கவைத்து சிப்பாயுடன் சேர்த்து தன்னுயிரையும்மாய்த்துக்கொண்டார். மக்களின் உயிரைக்காக்க தன்னுயிரை மாய்த்த இவருக்கு தலைவர் மாமனிதர் விருதளித்தமை குறிப்பிடத்தக்கது.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;8. இராசரட்ணம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாமனிதர் விருது பெற்ற இவரைப்பற்றி சுருக்கமாக எழுதுவதானால் தேசியத்தலைவரின் குரு எனலாம்.தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு இளம்பராயத்தில் அரசியல் சொல்லிக்கொடுத்த ஆசான் இவரே.ஈழத்தமிழினம் எவ்வாறு அடிமைப்படுகிறது உட்பட இன்னபிற விடயங்கள் மற்றும் கஸ்ரோவின் வரலாறு,நேருவின் வரலாறு போன்றவற்றை பிரபாகரனுக்கு ஊட்டியவர் இவரே.இவரை ஈழத்து நேதாஜி என்றும் அழைப்பதுண்டு.இவர் குறித்த சம்பவத்தை இதில் நினைவு கூருதல் சாலப்பபொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியத்தலைவர்களுடன் பேச்சு நடத்துவதற்காக விடுதலைப்புலிகள் உட்பட பல்வேறு தமிழ்இயக்கத்தினரும் இந்தியாவுக்கு சென்றிருந்தனர்.அங்கு அசோகா ஹோட்டலில் தங்கியிருந்தனர்.எல்லோருக்கும் ஒவ்வொரு அறை.புலிகளின் உறுப்பினர்களுடன் தலைவர் பிரபாவின் குருவான இராசரத்தினமும் அங்கு சென்றிருந்தார்.அவருக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது.ஹோட்டல் நடைமுறைகளின்படி அங்குள்ள அறைகளில் மது சிகரெட் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.இராசரத்தினம் அவர்கள் தனது அறையிலிருந்த மதுவை அருந்திவிட்டு தலைவர் பிரபாவின் அறைக்கு வந்து அவரது அறையிலுள்ள மதுப்போத்தலை தரும்படி பிரபாவிடம் கோரினார்.அதற்கு பிரபா வெளியில் வாங்கிக்குடிக்கும்படி கூறி அவருக்கு பணம் கொடுத்தார்.தனது அறையிலிருந்த மதுப்போத்தலை அவருக்கு கொடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாவின் அறையிலிருந்த மது சிகரெட் ஆகியவை அப்படியே இருந்ததை அடுத்தநாள் அறிந்துகொண்ட தமிழகப்பத்திரிகை ஒன்று 'விடுதலைப்புலிகள் மது அருந்துவதில்லை" என்ற தலைப்பில் செய்திவெளியிட்டிருந்தது.சமயோசிதமாக அப்போது நடந்துகொண்ட பிரபா தனது அமைப்புக்கே பெருமையை பெற்றுக்கொடுத்தார்.இராசரத்தினம் அவர்கள் கேட்டதற்கு இணங்க குருதானே எனப்பரிவு காட்டி தனது அறையிலிருந்த மதுவை அவருக்கு பிரபா வழங்கியிருந்தால் செய்யாத செயலுக்கு அடுத்தநாள் பத்திரிகை தலைகீழாக அர்த்தம் கற்பித்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாவின் குருவான இராசரட்ணத்தின் ஒரு மூத்தபுதல்வியே ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த தானு.இளைய மகள் அஞ்சனோ என்ற மாவீரர்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை நடராசா(இவரும் மாமனிதர் விருது பெற்ற ஒருவர்) என்பவர் வரைந்த புலிக்கொடிக்கு இறுதிவடிவமைத்தவரும் இராசரட்ணம் அவர்களே ஆவர்.இன்று தமிழ்மக்களின் தேசியக்கொடியாக உலகெங்கும் பறக்கும் புலிக்கொடியை அமைத்தவர் இராசரட்ணம் அவர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;மாமனிதர் குறித்த விவரங்கள் விளக்கங்களை தந்திருக்கும்.இந்த விருதுக்கு அரசியல்சாயம் எதுவும் இல்லை.விசேட அளவுகோல்களும் இல்லை.இந்தியாவில் வழங்கப்படும் பாரத ரத்னா, பத்மஸ்ரீ போன்ற அரசு விருதுகள்போல ஈழத்தில் விடுதலைப்புலிகளால் வழங்கப்படும் உயரிய விருது இதுவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;(இது விடயத்தில் மேலதிக விவரம் இருந்தால் ஆதாரத்துடன் அறியத்தந்தால் நன்று)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11870784-111502833935433859?l=ankusam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ankusam.blogspot.com/feeds/111502833935433859/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11870784&amp;postID=111502833935433859' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111502833935433859'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111502833935433859'/><link rel='alternate' type='text/html' href='http://ankusam.blogspot.com/2005/05/blog-post_02.html' title='மாமனிதர்விருது'/><author><name>தெய்வீகன்</name><uri>http://www.blogger.com/profile/16880283989260916474</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11870784.post-111502062673777042</id><published>2005-05-02T00:50:00.000-07:00</published><updated>2005-05-02T01:46:40.433-07:00</updated><title type='text'>மாமனிதர் விருது</title><content type='html'>தமிழ்ம்களின் போராட்ட நியாயப்பாடுகளை உலகெங்கும் ஓங்கி ஒலித்த ஊடகவியலாளர் சிவராமுக்கு விடுதலைப்புலிகளின் தேசியத்தலைவர் பிரபாகரன் மாமனிதர் விருது வழஙஙகி கௌரவித்திருக்கிறார். ஊடகப்பணியிலிருந்து அவர் ஆற்றிய தேசியப்பணிக்கு தமிழ்மக்களின் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img border='0' style='border:2px solid #006600; margin:2px' src='http://photos1.blogger.com/img/110/5527/200/sivaram.jpg' align="left" vspace="5" hspace="5"&gt;தமிழ்மக்களின் விடிவுக்காக இளம்பராயத்திலேயே போராடப்புறப்பட்ட சிவாராம்,விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமையே தமிழ்மக்களின் போராட்டத்துக்கு சரியானது என்ற கொள்கையுடன் தமிழ்த்தேசியப்போராட்டத்தை ஊடகத்துறை ஊடாக மககளுக்கு விளக்கினார்.ஈழப்போராட்டத்துக்கு இழைக்கப்படும் அநீதியை எழுத்துக்களால் எதிர்த்தார்.மக்களின் அரசியல் விழிப்புணர்வுக்கும் விடிவுக்கும் விடுதலைக்கும் அரும்பாடுபட்டார்.சர்வதேச அரங்கிலும் சாமர்த்தியமாக இச்செயற்பாட்டை சாமர்த்தியமாக மேற்கொண்டுவந்தார்.அவரது இப்பணியை-போராட்டத்தை கௌரவித்த அவருக்கு விடுதலைப்புலிகளால் இவ்வுயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளால் வழங்கப்படும் இந்த விருது குறித்து பல்வேறு விமர்சனங்களும் விளக்கமின்மைகளும் அவ்வப்போது ஆங்காங்கே சில வட்டஙகளில் காணப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மக்களின் வாழ்நிலை மேம்பாட்டுக்காக-உரிமை விடுதலைக்காக-விடுதலைப்போராட்டத்துக்காக அரும்பாடுபடும் தமிழருக்கு மாமனிதர் என்ற இந்த உயரிய விருதுத வழங்கப்படுகிறது.மாமனிதர் விருது பெறுபவர் புலிகள் உறுப்பினராகவோ அல்லது புலிகளின் ஆதரவாளராகவோ இருக்கவேண்டும் என்று புலிகள் நிபந்தனை விதிக்கவில்லை.கட்டுப்பாடுபோடவில்லை. உண்மையில் ஈழத்தமிழரின் விடிவுக்காக பாடுபடுபவர்களின் பெயரை தேர்ந்தெடுத்து புலிகளின் உயர்மட்டக்குழு தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு சிபார்சு செய்யும். பிரபாவின் தலைமையில் கூடும் அம்முக்கிய குழு தேர்வு செய்யப்பட்டவர் குறித்து பரிசீலித்து பின்னர் முடிவெடுத்து அவரை விருதுக்கு உரியவராக அறிவிக்கும்.இதேபோலவே நாட்டுப்பறறாளர் என்ற விருதும் வழங்கப்பட்டுவருகிறது.மறைந்த பத்திரிகையாளர் நடேசனுக்கு நாட்டுப்பற்றாளர் விருது வழங்கப்பட்டது.முன்னாள் ஈழநாடு ஆசிரியர் கோபு எனப்படும் கோபாலரட்ணம் போன்றோருக்கு தலைவர் பிரபாகரனின் கௌரவ விருது வழங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறு மாமனிதர் விருதுவழங்கப்பட்டவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காசி ஆனந்தன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;img border='0' style='border:2px solid #006600; margin:2px' src='http://photos1.blogger.com/img/110/5527/200/kasi.jpg' align="left" vspace="5" hspace="5"&gt;&lt;br /&gt;மட்டக்களப்பை சொந்த இடமாகக்கொண்ட காசி ஆனந்தன் ஈழத்துக் எழுச்சி கவிஞராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர்.இளைஞனாக இருந்த காலத்திலேயே சிங்கள ஆதிக்க வெறியர்களினதும் அரசினதும் அடக்குமுறைகள் மற்றும் ஆட்சிநடைமுறைகளுக்கு எதிராக போராட்டம் செய்தவர்.தனிச்சிங்களச்சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம் செய்து சிறை சென்றவர்.வாகன இலக்கத்தகடுகளிலேயே சிங்கள எழுத்துக்கள் இருக்கக்கூடாது என்று அவற்றை அகற்றும் போராட்டத்திலும் பாடசாலை பெயர்பலகைகளில் சிங்கள மொழி இருக்கக்கூடாது என்றும் போராட்டம் செய்து பொலீஸாரால் கைதாகி சிறையில் சித்திரவதை அனுபவித்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் இந்தியா சென்று அங்கு பெரியாருடன் இணைந்து பிராமணிய எதிர்ப்பு இயக்கத்தில் செயற்பட்டு பின்னர் இலங்கை வந்து ஈழத்தமிழர்களின் எழுச்சிக்கு துணைநின்றார்.அப்போது இவரது செயற்பாடுகளால் வெறுப்படைந்த ஸ்ரீலஙகா பொலீஸார் இவரை கைது செய்தனர்.இவர் ஸ்ரீலங்காவிலுள்ள ஐந்து சிறைகளில் சுமார் ஐந்துவருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான காலப்பகுதியில் பேச்சுக்களுக்காக புலிகள் இந்தியா சென்றபோது காசியும் இந்தியா சென்றார்.புலிகளின் அரசியல்விவகாரக்குழுவின் மத்ததிய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அக்காலப்பகுதியில் இந்தியாவில் ராஜீவ் அரசுடனான பேச்சுக்குழுவில் புலிகள் தரப்புபிரதிநிதிகளில் ஒருவராக காசி சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் தமிழகத்திலேயே தங்கிவிட்ட காசி ஆனந்தன் இன்றும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக அங்கு குரல்கொடுத்தவண்ணமுள்ளார்.ஈழப்போராட்ட காலத்தின் இக்கட்டான காலப்பகுதிகளில் தோளோடு தோள் நின்ற இந்த எழுசச்சிக்கவிஞனுக்கு தேசியத்தலைவர் பிரபாகரன் மாமனிதர் விருது வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குமார் பொன்னம்பலம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;img border='0' style='border:2px solid #006600; margin:2px' src='http://photos1.blogger.com/img/110/5527/200/kumar_tc.jpg' align="left" vspace="5" hspace="5"&gt;&lt;br /&gt;குமார் பொன்னம்பலம் அவர்கள் ஒரு பிரபல சட்டமேதையாக தன்வாழ்க்கையை நடத்தினாலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவவாக கொழும்பிலிருந்து அரசுடன் மோதியவர்.நாடாளுமன்ற பதவிகளுக்காக தமது கொள்கைகளை விற்று அரசியல்நடத்தம் தலைநகரின் அரசியல்பாரம்பரியத்துக்கு மத்தியில் ஒரு தனிமனிதனானக நின்றுபோராடியவர்.அவர் ஒரு போராளியாகவே அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராகவோ இல்லாதபோதும் தமிழ்மக்களின் பிரச்சினையை பேச தனக்கு தானே துணை என்ற துணிவுடன் சாதித்தவர்.இலங்கையில் மட்டுமல்ல ஐ.நா.சபையிலேயே ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்தவர்.இவரது கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள இயலாதவர்கள் இவரை துப்பாக்கிக்கு இரையாக்கினர்.சிவராமைப்போலவே தனக்கு முடிவு இதுதான் என்று தெரிந்தும் சிங்கத்தின் குகைக்குள் இருந்துகொண்டு சிங்கத்துடன் சவாலிட்டு சாகும்வரை தமிழனுக்காக தமிழனின் உரிமைக்காக தமிழர்களின் போராட்ட நியாயப்பாடுகளுக்காக குரல் கொடுத்து மடிந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கணிதமேதை எலியேசர் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;img border='0' style='border:2px solid #006600; margin:2px' src='http://photos1.blogger.com/img/110/5527/200/cj_eliezer_04.jpg' align="left" vspace="5" hspace="5"&gt;&lt;br /&gt;கணிதமேதை எலியேசர் அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டல் மீதும் போராட்டத்தின் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டு அதற்காக தொடர்ந்து குரல்கொடுத்து வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1918 ம் ஆண்டில் தமிழீழத்தில் பிறந்த பேராசிரியர் கணிதவியலில் கலாநிதி பட்டமும் பெற்று கணித மேதையாக திகழ்ந்த நாட்களில் இவருக்குக் கிடைத்த சர்வதேச விருதுகள் பல.இவரது பெயரிலேயே 1948 வெளியிடப்பட்ட "எலியேசர் தேற்றம்" கணிதவியலில் இன்றும் பிரயோகிக்கப்படும் தேற்றமாகும்.ஆஸ்திரேலியாவிலிருந்துகொண்டு ஈழத்தமிழ்மக்களின் விடிவுக்காகவும் விடுதலைக்காகவும் குரல் கொடுத்து அரும்பாடுபட்டவர்.தமிழ்மக்களின் போராட்டத்தின் நியாயத்தை ஆஸ்திரேலிய அரசு மட்டத்தில் எடுத்துச்சென்று பேசியவர். இவருக்கு 1997 ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களால் " மாமனிதர் " விருது வழங்கப்பட்டது முதல் முறையாக இவ் விருது தமிழீழத்துக்கு அப்பால் வாழும் ஒரு தமிழருக்கு வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அரியநாயகம் சந்திரநேரு &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;img border='0' style='border:2px solid #006600; margin:2px' src='http://photos1.blogger.com/img/110/5527/200/ariyanayagam_chandra_nehru.jpg' align="left" vspace="5" hspace="5"&gt;&lt;br /&gt;வடக்கு கிழக்கில்  மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்ட செயல்வீரர் அரியநாயகம் சந்திரநேரு.வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலக உறுப்பினரான இவர் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு,சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட பல பன்னாட்டு மனிதஉரிமைகள் அமைப்புக்களுடன் தமிழ்மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித உரிமைமீறல்கள் நிறுத்தப்படவேண்டும்.ஸ்ரீலங்கா படைகளால் சிறைப்படுத்தப்பட்டுள்ள அப்பாவி தமிழ்மக்கள் விடுவிக்கப்படவேண்டும் என பேச்சுநடத்தினார்.இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவிவகித்து அயராது சமூகசேவை ஆற்றியவர்.இவர் வன்னியிலுள்ள வடக்கு கிழக்கு மனிதஉரிமைகள் செயலகத்தின் கூட்டத்துக்கு சென்றுவிட்டு அம்பறைக்கு திரும்பிக்கொண்டிருக்கையில் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் கௌசல்யனுடன் வைத்து பொலநறுவ வெலிக்கந்தையில் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.வாழநாளில் இவர்புரிந்த சேவைகளை கௌரவிக்கும் முகமாக இவருக்கு தேசியத்தலைவர் பிரபாகரன் மாமனிதர் விருதுவழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கலைஞானி செல்வரட்ணம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேசியத்தவைர் பிரபாகரனால் மாமானிதர் வழங்கப்பட்ட இன்னுமொருவர் கலைஞானி செல்வரட்ணம்.இவர் காலைஞானி எல்லோராலும் அழைக்கப்பட்டுவந்தார்.ஈழத்தின் தொல்பொருட்சான்றுகளை சேகரித்த அவற்றை வருங்கால சந்ததிக்க வரலாறாக ஆதாரப்படுத்தும் பணி இன்றும் நினைவுகூரப்படுகிறது.எத்னையோ வரலாற்றுச்சின்னங்கள் தெர்லபொருட்கள் ஆதார அபூர்வங்கள் ஆகியவற்றை தேடி எடுத்து அவற்றை ஆவணப்படுத்தி ஈழத்தின் வரலாற்று இருப்பை ஆதாரபூர்வமாக நிரூபித்தவர்.தன் வாழநாளில் 55 வருடங்களாக தனியாளாக இப்பணியில் ஈடுபட்டுவந்தார்.யாழ்ப்பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப்பேராசிரியர்களும் இன்றும் இவரது பணியை பாராட்டி இவரைப்பற்றியே ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குரும்பசிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட இவர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை வதிவிடமாகக்கொண்டிருந்தார்.1995 இடப்பெயர்வின்போது இடம்பெயர்ந்து நாவற்குழிப்பகுதியில் தங்கியிருந்தார்.அக்காலப்பகுதியில் இராணுவம் குடாநாட்டின்மீது மேற்கொண்ட ரிவிரச இராணுவ நடடிவடிக்கையின்போது இவர் பாடுபட்ட சேகரித்த அரும்பொருட்கள் பலவும் இராணுவத்தால் அழிக்கப்பட்டுவிட்டன.இவருக்கு தேசியத்தலைவர் 1991 ஆம் ஆண்டு மாமனிதர் விருதுவழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிரித்திரன் சுந்தர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்களை சிரிக்கச்செய்து அதில இன்னபம் காணும் ஒரு மனிதராக வலம்வந்த ஈழத்து படைப்பாளி சிரித்திரன் சுந்தர் எனப்படும் சிவஞானசுந்தரம்.செய்தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம் என்பதை தாரகமந்திரமாகக்கொண்டு நகைச்சுவை உணர்வை மக்களுக்கு கொண்டு செல்லும் அரிய படைப்பாளி சிரித்திரன் சுந்தர்.ஈழத்தில் இவரை அறியாதவர்கள் எவருஅம இல்லை என்று கூறுமளவுக்கு பிரபலமான கேலிச்சித்திர வரைஞர்.ஈழத்துக்கு அப்பாலும் இவரது புகழ்கொடிகட்டிப்பறந்தது.45 வருடங்களாக கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையை வெளிப்படுத்திய சுந்தர் சுமார் 15000 கேலிச்சித்திரங்களை வரைந்துள்ளார்.1963 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிரித்திரன் சஞ்சிகை இவரது மறைவுவரை சுமார் 32 வருடங்கள் வெளிவந்து ஈழத்து நூல் வரலாற்றிலும் இடம்பிடித்துக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இராசரட்ணம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாமனிதர் விருது பெற்ற இவரைப்பற்றி சுருக்கமாக எழுதுவதானால் தேசியத்தலைவரின் குரு எனலாம்.தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு இளம்பராயத்தில் அரசியல் சொல்லிக்கொடுத்த ஆசான் இவரே.ஈழத்தமிழினம் எவ்வாறு அடிமைப்படுகிறது உட்பட இன்னபிற விடயங்கள் மற்றும் கஸ்ரோவின் வரலாறு,நேருவின் வரலாறு போன்றவற்றை பிரபாகரனுக்கு ஊட்டியவர் இவரே.இவரை ஈழத்து நேதாஜி என்றும் அழைப்பதுண்டு.இவர் குறித்த சம்பவத்தை இதில் நினைவு கூருதல் சாலப்பபொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியத்தலைவர்களுடனான பேச்சுக்கு தேசியத்தலைவர் பிரபாரன் இந்தியா சென்றிருந்த சமயம் இவரும் கூடச்சென்றிருந்தார்.அப்போது அங்கு அசோகா ஹோட்டலில் நடைபெற்ற விருந்து ஒன்றுக்கு இருவரும் அழைக்கப்ட்டிருந்தனர்.அங்கு விருந்துடன் சகலமதுபானங்களும் பரிமாறப்பட்டன.அப்போது தனக்குரிய மதுவை அருந்திவிட்டு பிரபாவின் மேசையிலிருந்த மதுவைத்தரும்படி பிரபாவிடம் கேட்டிருக்கிறார இராசரட்ணம்;.பிரபா தனது மேசையிலிருந்த மதுப்போத்தலைக்கொடுக்காமல் 'வெளியே வாருங்கள் நான் வாங்கித்தருகிறேன்" என்று கூறி,விருந்து நிறைவடைந்த பின்னர் தான் கூறியதுபோலவே இராசரட்ணத்துக்கு மது வாங்கிக்கொடுத்திருந்தார்.அடுத்த நாள் தமிழக பத்திரிகை ஒன்றில் 'பிரபாகரன் மது அருந்துவதில்லை' என்ற தலைப்பில் செய்திவெளியாகியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்தது என்னவெனில் விருந்து மண்டபத்தில் அன்று பிரபா இருந்த மேசையில் உடைக்கப்படாது கிடந்த மதுப்போத்தலை பார்த்துவிட்டு அந்த ஆதாரத்தின் அடிப்படையில் செய்தியாளர் ஒருவர் அதைச்செய்தியாக்கியிருந்தார்.இதில் நோக்கத்தக்கவிடயம் யாதெனில் இராசரட்ணம் கேட்டதற்கு இணங்க தனது குருதானே என்ற பரிவில் தனது மேசையிலிருந்த மதுப்போத்தலை அவருக்கு அருந்தக்கொடுத்திருந்தால் பிரபா செய்யாத தவறுக்கு அடுத்தநாள் செய்தி அர்த்தம்கற்பித்திருக்கும்.பிரபாவின் சமயோசிதஆற்றலுக்கு இது உதாரணம்காட்டும் நல்ல ஒரு சம்பவம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாவின் குருவான இராசரட்ணத்தின் ஒரு மூத்தபுதல்வியே ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த தானு.இளைய மகள் அஞ்சனோ என்ற மாவீரர்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை நடராசா(இவரும் மாமனிதர் விருது பெற்ற ஒருவர்) என்பவர் வரைந்த புலிக்கொடிக்கு இறுதிவடிவமைத்தவரும் இராசரட்ணம் அவர்களே ஆவர்.இன்று தமிழ்மக்களின் தேசியக்கொடியாக உலகெங்கும் பறக்கும் புலிக்கொடியை அமைத்தவர் இராசரட்ணம் அவர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;மாமனிதர் குறித்த விவரங்கள் விளக்கங்களை தந்திருக்கும்.இந்த விருதுக்கு அரசியல்சாயம் எதுவும் இல்லை.விசேட அளவுகோல்களும் இல்லை.இந்தியாவில் வழங்கப்படும் பாரத ரத்னா, பத்மஸ்ரீ போன்ற அரசு விருதுகள்போல ஈழத்தில் விடுதலைப்புலிகளால் வழங்கப்படும் உயரிய விருது இதுவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;(இது விடயத்தில் மேலதிக விவரம் இருந்தால் ஆதாரத்துடன் அறியத்தந்தால் நன்று)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11870784-111502062673777042?l=ankusam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ankusam.blogspot.com/feeds/111502062673777042/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11870784&amp;postID=111502062673777042' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111502062673777042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111502062673777042'/><link rel='alternate' type='text/html' href='http://ankusam.blogspot.com/2005/05/blog-post.html' title='மாமனிதர் விருது'/><author><name>தெய்வீகன்</name><uri>http://www.blogger.com/profile/16880283989260916474</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11870784.post-111490691992554032</id><published>2005-04-30T17:14:00.000-07:00</published><updated>2005-04-30T17:28:06.910-07:00</updated><title type='text'>சிவராமிற்கு மாமனிதர் விருது</title><content type='html'>பிரபல பத்திரிகையாளர் சிவராமிற்கு தமிழீழ விடுதலைப்புலிகளால் மாமனிதர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஈழதேசிய விடுதலைக்காக செயற்பட்ட அன்னாரின் செயற்கரிய சேவைகளை கௌரவிக்கும் முகமாகவே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. மாமனிதர்கள் பற்றிய பிறிதோர் பதிவில் இது பற்றி எழுதுகிறேன்.&lt;br&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.tamilnaatham.com/photos/leader20050430/leader300405/leader1300405.jpg"&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11870784-111490691992554032?l=ankusam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ankusam.blogspot.com/feeds/111490691992554032/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11870784&amp;postID=111490691992554032' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111490691992554032'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111490691992554032'/><link rel='alternate' type='text/html' href='http://ankusam.blogspot.com/2005/04/blog-post_111490691992554032.html' title='சிவராமிற்கு மாமனிதர் விருது'/><author><name>தெய்வீகன்</name><uri>http://www.blogger.com/profile/16880283989260916474</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11870784.post-111489457356093068</id><published>2005-04-30T13:52:00.000-07:00</published><updated>2005-04-30T16:54:24.490-07:00</updated><title type='text'>செய்தியாளன் செய்தியானான்</title><content type='html'>கடந்த வருடம் ஜூன் 9 ஆம் திகதி கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையம் முன்பாக கண்டனப் போராட்டம். ஆம். பத்திரிகையாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம். ஊடகவியலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு நின்று கோஷமிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;'நேற்று நிமலராஜன்: இன்று நடேசன்: நாளை யாரோ" என்று பதாகை பிடித்தனர். அதற்கு ஒரு வருடத்துக்குள்ளேயே விடை கிடைத்திருக்கிறது. தமிழ் ஊடகத்துறையில் ஏனைய ஊடகத்துறையினரே பொறாமைப்படுமளவுக்கு பெயர்பெற்ற மூத்த ஊடகவியலாளர் சிவராம் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் சர்வ சாதாரணமாக நடந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.geocities.com/thamilsangamam/arunam/sss.jpg" &gt;&lt;br&gt;சிவராம் அவர்களுடன் ஊடகவியலாளன் என்ற ரீதியில் நெருங்கிப்பழகும் வாய்ப்பு நான் கொழும்பில் வீரகேசரி பத்திரிகையில் பணிபுரியும்போது கிடைத்தது. அவருடன் பழகும் வரைக்கும் சர்வதேச அளவில் புகழ் வாய்ந்த இந்த மனுசன் எங்களோடையெல்லாம் பழகுமோ என்ற சந்தேகம் இருந்து வந்தது. அவருடன் பேசிய பின்னர்தான் புரிந்தது அவரது தோழமை மற்றும் இன்னபிற குணாதிசயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியாகிய அவரது பல கட்டுரைகளை அவர் சொல்ல சொல்ல அவருக்கு முன்னாலிருந்து எழுதும் வாய்ப்பு கிடைத்ததால் அவரிடமிருந்து பல விடயங்களை அக்காலப்பகுதியில் கற்றுக்கொண்டேன் என்றே கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வார இதழுக்கான கட்டுரை தர வெள்ளிக்கிழமை இரவுகளில் தான் வருவார். சுமார் 9 மணியளவில் என்னை அழைத்து தனக்கு முன்னால் இருத்திவிட்டு சின்னத்துண்டு கடதாசி ஒன்றை எடுத்து அதில் ஏதோ உயில் எழுதுவது போல ஆங்கிலத்தில் கிறுக்குவார். பிறகு ஆரம்பிப்பார். காலுக்கு மேல் கால் போட்டவாறே முகட்டைப்பாரத்துக்கொண்டு சொல்லத்தொடங்கினால் சுமார் ஒரு மணி நேரத்தில் கட்டுரையை சொல்லி முடிப்பார். அந்த ஒரு மணிநேரமும் எனக்கு ஒரு பல்கலைக்கழக விரிவுரையில் இருந்தது போல இருக்கும். அவ்வளவு அற்புதமான விடயங்கள் அந்த ஒரு மணிநேரத்தில் கிடைக்கப்பெறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச் சொற்களை அவர் தனது கட்டுரைக்காக தேர்ந்தெடுக்கும் முறை, அதை எதுகை மோனையுடன் பயன்படுத்தும் முறையும் பயன்படுத்தும் இடமும், ஈழத்தமிழ் வட்டார வழக்குகளை கட்டுரையின் இடையில் செருகும் லாவகம், முக்கியமான விடயங்களை விழித்துக்கூறும் வித்தியாசம், கட்டுரைக்கு விஞ்ஞான, அரசியல், தத்துவ, வரலாற்று, சமய உதாரணங்களை உட்புகுத்தும் திறன், எதிர்வுகூறல்களை முன்மொழியும் நுணுக்கம், நியாயப்பாடுகளை முன்வைக்கும் நுட்பம் என ஒவ்வொரு கட்டுரையிலும் இவற்றை அவதானிக்கலாம.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையின் இடையில் 'இந்த வசனத்தை எப்பிடி முடிக்கலாம்" எண்டு கேட்பார். என்னடா இது பத்திரிகைத்துறையில் நாங்கள் ஏணி வைத்தாலும் எட்டாத இந்தாள் எங்களிட்ட போய் ஆலோசனை கேக்குது எண்டு எனக்குள் வியந்த நாட்கள் பல உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையை சொல்லிக்கொண்டிருக்கும் போது இடையில் தொலைபேசியில் கதைப்பார், இணையத்தில் தொடர்பில்லாத விடயங்களையெல்லாம் பார்ப்பார் எல்லாம் நடக்கும் ஆனால் கட்டுரையின் கருப்பொருளிலிருந்து தவறாமல் பக்குவமாக கொண்டுசென்று முடிப்பார்.முடித்துவிட்டு 'கட்டுரை நல்லமெண்டா சீனவெடி அல்லது சிவராமுக்கு வெடி. என்ன நான் சொல்லிறது சரிதானே? எண்டு அடிக்குரலில இருந்து ஒரு கேள்வி கேட்பார். அதைக் கேட்டாலே எங்களுக்கு வெடி விழுந்த மாதிரி இருக்கும். சில நேரங்களில் வீட்ட நிண்டுகொண்டு ரெலிபோனில சொல்ல சொல்ல நான் எழுதின சந்தர்ப்பங்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை வெள்ளிக்கிழமை கட்டுரை எழுதவந்துவிட்டு 'எனக்கு இண்டைக்கு தண்ணி போடாட்டி எழுதவராது. ஆனா கையில காசில்லை. உம்மட்ட இருந்தா தாரும் அடுத்த கிழமை தாறன்" என்றார். (இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால் ஒரு தகவல் களஞ்சியம் போன்ற இவரிடம் செவ்வி காணவென தவம் கிடக்கும் ஊடகங்களுக்கு ஒரு நாளுக்கு ஒரு செவ்வி என்று கொடுத்திருந்தாலே சுளை சுளையாக உழைக்கலாம். ஆனால் பணத்துக்காக ஊடகத்தொழிலையும் எம்முடைய இன விடுதலை பற்றிய கருத்துக்களையும் விற்கக்கூடாது. சில விடயங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொடுக்கலாம் என்று வெளிநாட்டு ஊடகங்களிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொள்பவர்களிடம் கதைத்த பிறகு எமக்கு கூறுவார். சரி விஷயத்துக்கு வருவம்)&lt;br /&gt;நானும் காசு கிடக்கு என்று சொல்ல, சரி நீரும் வாரும். எண்டு கூட்டிக்கொண்டு மருதானை கப்பிற்றல் தியேட்டருக்கு அருகில் உள்ள பாருக்கு போனோம். எனக்கு பியரும் தனக்கு ரம்மும் ஓடர் பண்ணிவிட்டு தனது கட்டுரைகள் பற்றிய கதையை தொடக்கினார். நானும் முனிவரிடம் சிஷ்யன் கதைக்கிற மாதிரி அவர் கதைக்கிறத கேட்டுக்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;'தம்பி பேப்பரில உந்தப்பேர் போட்டு எழுதவேணும் எண்ட மாயையில நிக்கவேண்டாம். பேர் போடுறதில ஒண்டுமில்ல. அதுதான் பத்திரிகைத்துறை எண்டு நிண்டியளோ உருப்படமாட்டியள். படியுங்கோ அதில எவ்வளயோ படிக்க கிடக்கு" எண்டு சொல்ல, நானும் தலையசைத்துவிட்டு 'அண்ண நீங்கள் டெய்லி மிரரில எழுதிற கட்டுரைகளில ஏன் இப்பிடி கடினமான ஆங்கில வார்த்தையளப் பாவிக்கிறியள். எல்லாரும் விளங்கிற மாதிரி எழுதலாம்தானே மற்ற ஆக்கள் அப்பிடித்தானே எழுதினம்?" என்றேன். அதுக்கு ஒருக்கா என்னை ஏளனமா பாத்துவிட்டு உங்கள் எல்லாருக்கும் விளங்கவேணும் எண்டதுக்காக விஞ்ஞானிமார் பொறுத்திருந்திச்சனமெண்டா இண்டைக்கு விஞ்ஞானம் இவ்வளவுதூரம் வளர்ந்திருக்காது. விளங்காத ஆக்கள் படிச்சு தெரியட்டும். என்னால அவன் இங்கிலீஷ் படிச்சதா இருக்கட்டும்" என்று அறிவுச்செருக்கோடு கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி நீங்கள் இவ்வளவு தூரம் ஊடகத்துறையில சாதிச்சிட்டியள் இளம் தலைமுறையை உங்கட வழியில வளர்த்துவிடவேணும் எண்ட எண்ணமில்லையோ எண்டு கேட்டதுக்கு, மிச்ச ரம்மை அப்பிடியே கிளாசில ஊத்திப்போட்டு எரிச்சலோடு 'நான் முதல் சொன்ன மாதிரி இப்ப ஊடகத்துறைக்கு வாறவனெல்லாம் பேப்பரில பேர் வரவேணும் எண்ட நோக்கத்தோட வாறாங்கள். இவங்களுக்கு படிப்பிச்சு என்ன புண்ணியம். இருந்தாலும் மட்டக்களப்பில இருந்து ஜெயானந்தமூரத்திய படிப்பிச்சன் (இப்போது மட்டக்களப்ப மாவட்ட எம்.பியாக உள்ளவரேதான்). அவன் முன்னுக்கு வந்தான். ஆனா சமூக சேவை அது இது எண்டு அவன் எம்.பியா வர ஆசைப்பட்டு அந்த வழியில போய்ட்டான். அதப்போல யாழ்ப்பாணத்தில தவச்செல்வனை வளத்துக்கொண்டு வாறன். (ஐ.பி.சி செய்தியாளர்). அவன் நல்லா செய்யிறான். என்ர கையால யாழ்ப்பாணத்தில ஒண்டு மட்டக்களப்பில ஒண்டு. காணும்தானே" என்றார். எனக்கு இதுக்கு மிஞ்சி என்னதைக் கதைக்கிறது எண்டு ஆகிப்போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடன் மட்டுமல்ல அலுவலகத்தில் எல்லோரிடமும் மிகவும் தோழமையாக பழகுவார். ரைப்செற்றிங் பிரிவில் உள்ளவர்கள் முதல் சகலரிடமும் தோழமையாக பேசுவார் பழகுவார். எம்முடன் தமிழ்;த் திரைப்படங்கள் பற்றி விமர்சனம் செய்வார். இப்ப வாற பாட்டுகளெல்லாம் பழைய ஆக்களுக்கு பிடிக்குதில்லை. நீங்கள் விதிவிலக்கா இருக்கிறியளே எண்டு கேட்டா 'ஏன் பழைய பாட்டுகள் எல்லாம் பெரிய திறமோ? சட்டி சுட்டதடா, கை விட்டதடா எண்டுபோட்டு அதை தத்துவப்பாட்டு எண்டு சொல்லி கும்பிடுவாங்கள். சட்டி சுட்டா கைய விடத்தானே வேணும். இது பெரிய தத்துவம் எண்டு அவயள் அதைப்பாட்டில எழுதுவனம். அதை நாங்கள் கேக்கவேணும்" எண்டு நகைச்சுவை உணர்வோடு பேசி பலரது மனங்களையும் வென்றவர்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கதைத்துக்கொண்டு போனால் தொல்காப்பியம், சீவகசிந்தாமணி எண்டெல்லாம் உதாரணம் காட்டி அதில வாற பாட்டுகளையெல்லாம் சொல்லி பொழிப்பு சொல்லுவார். நாங்கள் வாயப்பிளந்து கொண்டு நின்று கேட்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் ஊடகத்துறையில் ஊடகவியலாளர்கள் சமகால தொழில்நுட்ப முன்னேற்றங்களை தமக்குள் உள்வாங்கி நவீன யுகத்துடன் போட்டியிட்டு பணிபுரியும் செயல் வீர்களாக மாறவேண்டும் என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதிரி என்பதற்காக அவனது எல்லா செயல்களையும் எதிர்க்காமலும் நண்பன் என்தற்காக அவனது எல்லா செயல்களையும் ஆதரிக்காமலும் நடுநிலை விமர்சகனாக இவர் விளங்கினார். ஜே.வி.பி. சில ஆரோக்கியமான அரசியல் படிநிலை முன்னேற்றங்களை மேற்கோள்காட்டி அதுபோன்று தமிழ்த் தேசிய முன்னேற்றத்துக்கு நாம் வியூகங்களை வகுக்க வேண்டும் என்று அவர் எழுதிய கருத்துக்களும் எமது தேசியம் அந்நிய சக்திகளால் சிதைக்கப்படாமலிருக்க பாமர மக்கள் முதல் உயர்மட்ட மக்கள் வரை அனைவருக்கும் தமிழர் போராட்டத்தின் நியாயப்பாடுகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எடுத்துக்கூற வேண்டுமே தவிர சும்மா பந்தா பரம சிவன்களாக திரிவதில் வேலையில்லை என்ற விமர்சனங்களும் இவை போன்ற பல அவரது கட்டுரைகளும் அவரை நடுநிலை வாசகனாக இனங்காட்டியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்படும் இராஜதந்திர உபாயங்கள், அவை ஈழப் போராட்டத்தில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தப்போகிறது, செலுத்துகிறது? கடந்த காலங்களில் இப்படியான சம்பவங்கள் என்ன பாடத்தை உணர்த்தியிருக்கின்றன போன்ற விடயங்களை ஆதாரபூர்வமாக நிரூபித்து வாசகனை எழுத்துக்களால் கவரும் திறன்கொண்டவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் சமபுலமை கொண்டவராக இருந்ததால் இவற்றை தருணத்துக்கேற்ப தக்கமுறையில் முன்வைக்க இவருக்கு முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரும் டெய்லி மிரர் பத்திரிகைளில் எழுதிய கட்டுரையிலும் அமெரிக்க அரசு யூ.எஸ்.எய்ட் என்ற உதவி அமைப்பு ஊடாக ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்துள்ளது. ஆனால் உதவி என்ற பெயரில் இப்படி அரசசார்பற்ற நிறுவனம் என்ற நாமத்துடன் ஊடுருவும் அமெரிக்கா ஏனைய நாடுகளில் மேற்கொண்ட காரியங்களை அறிந்து ஜே.வி.பி. அதை எதிர்க்கிறது. நாட்டின் ஆளும் இயந்திரத்தினுள்ளேயே ஊடுருவ அமெரிக்கா போடும் இந்தப் போலி முகத்தால் ஹெய்ட்டி போன்ற நாடுகளின் அனுபவம் என்ன என்றும் அதை உணர்ந்துதான் ஜே.வி.பி. காலணித்துவ எதிர்ப்பு நாள் என ஒரு நாளேயே அறிவித்து எதிர்ப்பில் இறங்கியுள்ளது என்றும் ஆதாரபூர்வமாக சிவராம் எழுதியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய காலகட்டத்தில் தமிழில் இவ்வாறு தரம்மிக்க - நியாயபூர்வமான - ஆய்வுகளை எழுதவல்ல ஒரே ஒரு பத்திரிகையாளர் அவர் மட்டுமே. அவரை இன்று தமிழ்ப்பத்திரிகை உலகம் இழந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடன் பழகிய அவரது எழுத்துக்களை வாசித்த எவருக்கும் இந்தப்பாதிப்பு ஏதோ ஒரு வகையில் இருக்கத்தான் செய்யும். சிலகாலம் பழகிய எனது சிறு பதிவுதான் இது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11870784-111489457356093068?l=ankusam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ankusam.blogspot.com/feeds/111489457356093068/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11870784&amp;postID=111489457356093068' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111489457356093068'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111489457356093068'/><link rel='alternate' type='text/html' href='http://ankusam.blogspot.com/2005/04/blog-post_30.html' title='செய்தியாளன் செய்தியானான்'/><author><name>தெய்வீகன்</name><uri>http://www.blogger.com/profile/16880283989260916474</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11870784.post-111479506873581834</id><published>2005-04-29T10:16:00.000-07:00</published><updated>2005-04-29T10:17:48.736-07:00</updated><title type='text'>தமிழரின் தலை உருள்கிறது</title><content type='html'>இந்தோனேஷியா பாலியில் போதைப்பொருட்கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள ஒன்பதுபேரில் தமிழ்இளைஞனும் ஒருவர் என்பது பழைய செய்தி.அவர்தான் அக்கூட்டத்தின் தலைவராக செயற்பட்டுள்ளார் என்பது புதிய செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்புதிய தகவலால் மேலும் பல தகவல்கள் வெளிவர வழக்கு விவகாரம் மேலும் சூடுபிடித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போதைப்பொருளை தமது உடம்பில் மறைத்துக்கட்டிக்கடத்த முற்படுகையில் பாலியிலுள்ள விமான நிலையம் ஒனன்றில்வைத்து கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சிலரைத்தொடர்ந்து அங்கு அதே திட்டத்துடன் மீதிப்போதைப்பொருளுடன் ஆயத்தமாக நின்றவர்களையும் சேர்த்து அப்படியே ‘அப்பியது’ இந்தோனேஷியப்பொலீஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;(இது தொடர்பாக கடந்த பதிவில் விளக்கமாக உள்ளது.)&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த இரு வாரங்களாகவே ஒன்பது பேரையும் இந்தோனேஷியப்பொலீஸார் தனித்தனியே மேற்கொண்ட விசாரணையில் கிணறு வெட்டப்பூதம் கிளம்பிய கதையாக புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது கைது செய்யப்பட்ட கும்பலின் தலைவன் என இவ்வளவு நாளும் தெரிவிக்கப்பட்டுவந்த அன்ரு ஷான் உண்மையில் இந்தக்கும்பலின் இரண்hவது கை என்றும் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞனான மயூரன் சிவகுமாரனே கும்பலின் முக்கியபுள்ளி என்றும் இந்தோனேஷியப்பொலீஸார் தெரிவித்துள்ளனர்.இதைஅடுத்து தற்போது மயூரன் மற்றைய கைதிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு அவரிடம் விசேட விசாரணை நடைபெற்றுவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போதைப்பபொருள் கடத்தும் இவர்களது திட்டத்தின்படி இந்தோனேஷியாவிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு சென்று அங்கு விமான நிலையத்தில் இறங்கியவுடன் கொண்டுபோன ‘சரக்கை’ உரியவரிடம் ஒப்படைக்க அவரை தொலைபேசியில் அழைப்பது என்று வியூகம்வகுத்திருந்தனர்.ஆகவே இவர்களது கைத்தொலைபேசிகளை சோதனை செய்தால் அதிலிருந்து கணிசமான தகவல்களைப்பெறலாம் என்ற நோக்கில் இந்தோனேஷியப்பொலீஸ் தீவிரமாகியிருக்கிறது.ஆனால் தனது கைத்தொலைபேசியின் PIN இலக்கத்தை மயூரன் அழித்துவிட்டார்.அதைக்கேட்டபோதும் தரமறுக்கிறார் என்று இந்தோனேஷியப்பொலீஸார் தெரிவிக்கின்றனர்.இதனால் தற்போது ஆஸ்திரேலியாவில் மயூரன் பாவித்த தொலைபேசியின் இலக்கம் உள்ளிட்ட சகல விவரங்களையும் திரட்டிக்கொண்டு ஆஸ்திரேலிய சமஷ்டிப்பொலீஸ் குழு ஒன்று இந்தோனேஷியாவுக்கு சென்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குள் ஆஸ்திரேலியாவில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலீஸ் புதுத்தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளதால் அது அரச மட்டத்தையே கலக்கியெடுத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மயூரனின் தயார் ராஜி சிட்னியிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணிபுரிகிறார்.2000 ஆம் ஆண்டு அந்த அலுவலகத்தில் சுமார் 5 மாதங்கள் மயூரன் பணிபுரிந்துள்ளார்.தற்போது பாலியில் கைதான மூவரிடம் எல்லாநாட்டுக்கும் செல்லக்கூடிய விஸா குத்திய பாஸ்போட் வைத்துள்ளார்கள்.ஆகவே இவர்களுக்கான போலி பாஸ்போட்டை மயூரன்தான் பாஸ்போட் அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொடுத்தாரா என்ற சந்தேகம் தோன்றியுள்ளது என்று பொலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.&lt;br /&gt;வெளிவாகரங்களுடன் சம்பத்தப்பட்ட பாஸ்போட் அலுவலகத்தில் இப்படியோரு துணிகரச்செயல் நடந்திருக்கிறதா என்று எல்லோரும் மூக்கில் விரல் வைத்து வேறு சந்தேகங்களுக்கு விதைபோட முதல் வெளிவகார அமைச்சர் அலக்ஸாண்டர் டௌனர் இதை முற்றாக மறுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;“அவசரப்பட்டு நாம் எந்த முடிவுக்கும் வரவில்லை.பாலியில் கைதானவர்க்ள இதற்கு முதல் இந்தோனேஷியாவுக்கு போலி பாஸ்போட்டில் வந்துள்ளார்கள் என்று இந்தோனேஷயப்பொலீஸ் கூறியுள்ளது.அதற்காக அவ்வாறு பிடிப்பட்டவர்களின் உறவினர் பாஸ்போட் அலுவலகத்தில் பணிபுரிவதுதான் இதற்குக்காரணம் என்று கூறிவிடமுடியாது.”  என்றும் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை,மயூரனின் சிட்னியிலுள்ள வீட்டை பொலீஸார் சல்லடைபோட்டு தேடியுள்ளனர்.ஏனைய நபர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் முழுஅளவில் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலீஸார் தெரிவிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒன்பது பேருக்கும் மரணதண்டனைதான் என்று இந்தோனேஷிய அரச,பொலீஸ் வட்டாரங்கள் தொடரந்து தெரிவித்தவருகின்றன.நீதிபதியின் தீரப்பை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11870784-111479506873581834?l=ankusam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ankusam.blogspot.com/feeds/111479506873581834/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11870784&amp;postID=111479506873581834' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111479506873581834'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111479506873581834'/><link rel='alternate' type='text/html' href='http://ankusam.blogspot.com/2005/04/blog-post_29.html' title='தமிழரின் தலை உருள்கிறது'/><author><name>தெய்வீகன்</name><uri>http://www.blogger.com/profile/16880283989260916474</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11870784.post-111409355496156957</id><published>2005-04-21T00:25:00.000-07:00</published><updated>2005-04-21T07:25:54.966-07:00</updated><title type='text'>இந்தோனேஷியாவில் ஆஸ்திரேலிய சுனாமி</title><content type='html'>இந்தோனேசியாவில் வீசியுள்ள ஆஸ்திரேலிய சுனாமியால் ஆஸ்திரேலியா கலங்கிப்போயுள்ளது.இந்த விநோதமான சம்பத்தால் இன்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் நீ முந்தி நான் முந்தி என்று இந்த செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு மக்களை பரபரப்பாக்கிக்கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வேறொன்றுமில்லை.இந்தோனேஷியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்தமுயன்ற ஆஸ்திரேலியர்கள் ஒன்பது பேர் தொடர்பாக ஆஸ்திரேலிய சமஷ்டிப்பொலீஸார் இந்தோனேஷியப்பொலீஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அந்த ஒன்பது பேரும் போதைப்பொருளோடு கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் &lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;பிடிபட்டவர்களில் ஒருவர் தமிழர்.சிட்னியை சேர்ந்த மயூரன் சுகுமாரன் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளவர் ஆவார்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிடிபட்டால் என்ன விசாரணை,ஜெயில் என்று வழக்கமாக நடப்பவைதானே என்று நினைத்தவிடவேண்டாம்.இந்தோனேஷியாவின் சட்டமுறைப்படி போதைப்பொருள் கடத்தி அவர்களது நாட்டில் பிடிபடுபவர்கள் சுட்டுக்கொல்லப்படுவர்.இதன்பிரகாரம் தற்போது பிடிபட்டுள்ள ஆஸ்திரேலிய பிரஜைகள் ஒன்பது பேருக்கும் மரணதண்டனைதான் என்று பலதரப்பிலும் தெரிவிக்கப்பட்டாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தோனேஷியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வெளியே வைத்து முதலில் பிடிக்கப்பட்ட ஒருவரைத்தொடர்ந்தே ஏனைய எண்மரும் வரிசையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் நால்வருக்கு மரணதண்டனை உறுதி என்று தற்போதைக்கு சட்டவல்லுனர்களை மேற்கோள்காட்டி விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மீதிப்பேரின் நிலை குறித்து இதுவரை தெரியவரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவத்தை அடுத்து, போதைப்பொருள் கடத்தல் என்ற பாரிய குற்றத்துக்கு அப்பால் மனிதநேயமற்ற முறையில் எமது நாட்டவர்களை இன்னொரு நாடு சுட்டுக்கொல்ல அனுமதிப்பதா என்ற போராட்டத்தில் ஆஸ்திரேலிய மக்கள் இறங்கியுள்ளனர்.அதாவது இந்தோனேஷியால் வைத்து கைது செய்யப்பட்டால் மரணதண்டனை என்று தெரிந்தும் ஆஸ்திரேலிய சமஷ்டிப்போலீஸ் ஏன் அவர்களை இந்தோனேஷய பொலீஸாரிடம் பிடித்துக்கொடுத்தது? ஆஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர் ஆஸ்திரேலிய விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்திருக்கலாமே என்று வாதப்பிரதிவாதங்கள் கிளம்பியுள்ளன.ஆஸ்திரேலிய சமஷ்டிப்பொலீஸார் மனிதாபிமானமற்ற முறையில் செயற்பட்டுவிட்டனர் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கைதுசெய்யப்பட்டவர்கள் தமது கால்கள் வயிற்றுப்பகுதி ஆகியவற்றில் இறுக்கக்கட்டப்பட்ட பட்டிகளில் சுமார் 11 கிலோ கிராம் போதைப்பொருளை மறைத்து கடத்த முயன்றுள்ளனர் என்றும் இவர்கள் காரியத்தை கச்சிதமாக செய்துமுடித்தால் ஆளுக்கு 15 ஆயிரம் டொலர் தருவதாக போதைப்பொருள் கடத்துனர்களால் பேரம் பேசப்பட்டுள்ளமை தெரியவந்தள்ளதாகவும் பொலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் தமக்கு அதனுள் என்ன இருந்தது என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்ட நபர்கள் தந்ததை தாம் கொண்டுசெல்ல முயன்றதாவும் கைதுசெய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் கடந்த ஓரிருவாரங்களுக்கு முன் வீட்டுக்க தெரியாமல் இந்தோனேஷியா சென்றுள்ளனர் என்று தற்போது தெரியவருகிறது.இவர்களது பெற்றோர்,நண்பர்கள்,காதலி ஆகியோர் தெரிவிக்கையில் கடந்த சில நாட்களாகவே தமக்கு இவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தமுடியவில்லை.கைத்தெலைபேசிக்கு அழைத்தபோதும் அது வேலைசெய்யவில்லை என்றும் தொலைக்காட்சியில் இவர்களை காண்பித்தபோது தாம் அதிர்ச்சிஅடைந்துவிட்டதாவும் கூறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கைது செய்யப்பட்டவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுமா இல்லையா என்ற கேள்வி தற்போது ஆஸ்திரேலியாவை சுனாமியாக கலக்கிக்கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்திரேலியர்கள் பலரை காவுகொண்ட இந்தோனேஷியாவின் பாலி சுற்றுலா தலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் முக்கிய சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் கைதுசெய்யப்பட்டுள்ளவருக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும் என்றும் தெரிவித்துவரும் ஆஸ்திரேலியா பொதுவில் மரணதண்டனைமுறை நீக்கப்படவேண்டும் என்ற கொள்கையை கொண்டுள்ள நாடு என்பது குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11870784-111409355496156957?l=ankusam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ankusam.blogspot.com/feeds/111409355496156957/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11870784&amp;postID=111409355496156957' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111409355496156957'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111409355496156957'/><link rel='alternate' type='text/html' href='http://ankusam.blogspot.com/2005/04/blog-post_21.html' title='இந்தோனேஷியாவில் ஆஸ்திரேலிய சுனாமி'/><author><name>தெய்வீகன்</name><uri>http://www.blogger.com/profile/16880283989260916474</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11870784.post-111302296886328926</id><published>2005-04-08T22:00:00.000-07:00</published><updated>2005-04-08T22:02:48.866-07:00</updated><title type='text'>அல்லி ராணியும் அலரி ராணியும்</title><content type='html'>தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னர் நடிகையாக இருந்தவர். ஜனாதிபதி சந்திரிகா ஒரு நடிகரை மணந்தவர். (தான்தான் உலகிலேயே சிறந்த நடிகை என்று ஜனாதிபதி சந்திரிகா கடந்த வருடம் பொதுக்கூட்டமொன்றில் பேசியிருந்தார். அதுவேறு.) ஜெயலலிதாவும் ஒரு தீவிர புலி எதிர்ப்பாளர். சந்திரிகாவும் அப்படியானவர். அவரோ கர்நாடகத்தில் பிறந்த தமிழ்நாட்டை ஆளுகிறார். இவர் ஸ்ரீலங்காவில் பிறந்து ஈழத்தை அடக்க நினைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பல விடயங்களில் ஒத்துப்போகும் இருவரினதும் அரசியல் சிந்தனைகளும் பதவியை பிடிப்பதற்காகப்போடும் திரைமறைவுத்திட்டங்களும் கூட ஒன்றாகவே காணப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனாதிபதி பதவியை இலக்குவைத்து அடுத்த தடவையும் அந்தக்கதிரையை பிடிப்பதற்கு ஜனாதிபதி சந்திரிகா அண்மைக்காலங்களில் அவிழ்த்துவிட்டு இரகசிய சத்தியப்பிரமாண கதைகளெல்லாம் எதிர்க்கட்சிகளாலும் சட்ட வல்லுனர்களாலும் சுட்டுவீழ்த்தப்பட்டு விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் தனது பதவியை எப்படித்தக்க வைப்பது என்பது தொடர்பில் தனது சட்ட ஆலோசகர்களுடன் மந்திராலோசனை நடத்திய ஜனாதிபதி சந்திரிகா எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள என்ன வியூகத்துடன் காத்திருக்கிறார் என்பதை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரிகாவின் முன்னாள் விசுவாசியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய முக்கிய கரங்களில் ஒருவருமான எஸ்.பி.திஸாநாயக்க போட்டு உடைத்திருக்கிறார்.&lt;br /&gt;ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசியலமைப்பின் படி ஒருவர் இரண்டு தடவைகளுக்குமேல் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது. அரசியலமைப்பின் 31(2) சரத்தின்படி ஜனாதிபதி பதவிக்கு இரண்டு தடவைகள் தெரிவு செய்யப்பட்டவர் மூன்றாவது தடவை அப்பதவிக்கு மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கான தகுதியை இழக்கிறார்.&lt;br /&gt;இதனை தெளிவாகக்கூறியுள்ள அரசியலமைப்பு, ஏற்கனவே இரண்டு தடவை பதவிவகித்த ஜனாதிபதி, ஜனாதிபதி ஒருவர் இராஜினாமா செய்யும்போது அதனால் ஏற்படும் வெற்றிடத்துக்கு மீண்டும் ஜனாதிபதியாக வரக்கூடாது என்று எந்த இடத்திலும் கூறவில்லை. இந்த ஓட்டையை பாவித்து மீண்டும் ஜனாதிபதியாகுவதே சந்திரிகாவின் நோக்கம் என்ற விடயத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார் எஸ்.பி.திஸநாயக்க.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமது டம்மி வேட்பாளராக தற்போதைய பிரதிப்பாதுகாப்பு அமைச்சரான ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்கவை நிறுத்த உள்ள சந்திரிகா குமாரதுங்க, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நீக்கிவிட்டு தான் பிரதமராகுவார்.&lt;br /&gt;தேர்தலில் வென்ற ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்க பின்னர் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய, அப்பதவிக்கு அப்போதைய பிரதமர் சந்திரிகா குமாரதுங்க நியமிக்கப்படுவார். ரட்ணஸ்ரீ தெரிவு செய்யப்பட்ட காலம் முழுவதும் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக பதவிவகிக்கப்போகிறார். அவர் ஜனாதிபதியாக வந்த உடனேயே அமைச்சரவை மறு சீரமைக்கப்பட்டு தனக்கு ஜனாதிபதி பதவியை பெற்றுத்தந்த ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவியிலிருந்து நீக்குவார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மொத்தத்தில் இங்கு நடக்கப்போகும் காரியங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;1) வாடகைத்தாய் போல ஜனாதிபதி பதவியை பெற்று அதை சந்திரிகாவிடம் தாரைவார்க்கப்போகிறார் ரட்ணஸ்ரீ.&lt;br /&gt;&lt;br /&gt;2) தனக்கு ஜனாதிபதி பதவியை பெற்றுத்தந்ததற்கு பிரதியுபகாரமாக ~பொன் வைத்த இடத்தில் பூ வைப்பது போல ரட்ணஸ்ரீக்கு பிரதமர் பதவியை வழங்கப்போகிறார் சந்திரிகா குமாரதுங்க&lt;br /&gt;&lt;br /&gt;3) அதிகார இழுபறியில் தற்போது அடிக்கடி சந்திரிகாவுடன் மோதுப்படும் மஹிந்த ராஜபக்ஷ பலிக்கடாவாகி பிரதமர் பதவியை இழக்கப்போகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;4) மஹிந்த ராஜபக்ஷவை வெட்டி விடுவதன் மூலம் அவர் முன்னர் பிரதமர் பதவிக்கு தெரிவான போது அவருக்கு போட்டியாக இருந்தவரும் - ஜனாதிபதியின் ஆஸ்தான வித்தகருமான - கதிர்காமரின் வயிற்றில் பால் வார்க்கப்போகிறார் ஜனாதிபதி.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனாதிபதி கதிரையை மீண்டும் பிடிப்பதற்கு இவ்வளவு பெரிய திட்டத்துடன் காத்திருக்கிறார் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. தற்போது அவரின் கவனமெல்லாம் தனது கட்டுப்பாட்டிலுள்ள பொலிஸ், இராணுவம் இரண்டையும் பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலில் ரட்ணஸ்ரீயை எப்படியாவது வெல்லவைப்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே தந்திரோபாயத்தையே 2001 இல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா வேறு சூழ்நிலையில் பயன்படுத்தியிருந்தார். அதாவது டான்சி நிலபேர ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா முதல்வராக பதவி வகிக்க முடியாது என்று உச்ச நீதமன்றம் உத்தரவிட்டவுடன், பதவியை இராஜினாமா செய்த ஜெயலலிதா அதற்கு டம்மி முதல்வராக அப்போதைய வருமானத்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நியமித்தார். பின்னர், வழக்கில் தான் நிரபராதி என்று தீர்ப்பு வாங்கிய பின் ஆண்டிப்பட்டி தேர்தல் தொகுதியில் வென்று மீண்டும் முதல்வரானார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அக்கினிப்பரீட்சையிலிருந்து தனக்கு தேவையான சட்ட நூலை இழுத்து தனது பதவிக்கதிரைக்கு குஞ்சரம் கட்டியிருக்கிறார் சந்திரிகா என்றே கூறவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் அன்று அல்லிராணி எனப்பட்ட ஜெயலலிதா புரிந்த லீலையை இன்று அலரி மாளிகைக்குள் புகுவதன்மூலம் தானும் புரிந்து பதவியைப்பிடிக்க திட்டமிடுகிறார் சந்திரிகா அம்மையார்.&lt;br /&gt;&lt;br /&gt;பதவியை பிடிப்பதற்கு குறுக்கு ஒழுங்கைகள், பொட்டுகள் எல்லாவற்றையும் தேடிப்பிடித்துள்ள ஜனாதிபதி சந்திரிகா தனது இந்த இந்த வேகத்தையும் விவேகத்தையும் தமிழர் பிரச்சினைக்கான தீர்வில் காட்டியிருந்தால் அது எப்பவோ சுமூகமாக முடிந்திருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11870784-111302296886328926?l=ankusam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ankusam.blogspot.com/feeds/111302296886328926/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11870784&amp;postID=111302296886328926' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111302296886328926'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111302296886328926'/><link rel='alternate' type='text/html' href='http://ankusam.blogspot.com/2005/04/blog-post_08.html' title='அல்லி ராணியும் அலரி ராணியும்'/><author><name>தெய்வீகன்</name><uri>http://www.blogger.com/profile/16880283989260916474</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11870784.post-111288306753523093</id><published>2005-04-07T07:05:00.000-07:00</published><updated>2005-04-07T07:11:07.540-07:00</updated><title type='text'>அரசின் ஊதகமும் புலிகளின் ஊடகமும்</title><content type='html'>விடுதலைப்புலிகள் தமது புலனாய்வு யுத்தத்தால் உலகையே பிரமிக்கவைத்த அதே வீச்சில் இன்று ஆரம்பித்திருக்கும் அதன் இன்னொரு அத்தியாயம் தென்னிலங்கை அரசியல் வட்டாரத்தை கிலிகொள்ளச் செய்திருக்கிறது. அதாவது சர்வதேச அளவிலும் பிரசாரம் செய்யக்கூடிய வகையில் அவர்கள் ஆரம்பித்திருக்கும் ஈழத்தி;ன் தேசிய தொலைக்காட்சி பலரது கண்களை குத்திக்குடைந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மாத்திரத்திலேயே புற்றீசல்கள் போல கண்டன அறிக்கைகளும் பயங்கரவாத அமைப்பொன்றுக்கு இவ்வளவு சுதந்திரத்தை வழங்குவதா என்ற கோஷங்களும் தென்னிலங்கையில் எழுந்து பறக்கத் தொடங்கிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் யுத்தத்துக்கு தமது புலனாய்வுச்செயற்பாட்டை எவ்வளவுக்கு வலுப்படுத்தி அதற்கு செயலூக்கம் கொடுத்தார்களோ அதே விகிதாசாரத்தில் தமது போராட்டம் பற்றிய உண்மை நிலையை ஈழத்துக்கு அப்பால் தென்னிலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துக்கூறுவது தொடர்பான அரசியல் பிரசார வேலைத்திட்டத்தை நிதானமாக முன்னெடுத்து வருகிறார்கள். ஒரு கெரில்லா அமைப்பு என்ற பரிணாமத்திலிருந்து ஒரு அரசாங்கமாக - சுதந்திரப்போராட்ட இயக்கமாக - மக்கள் தேர்ந்த அமைப்பாக உருவெடுத்துள்ள புலிகள் அமைப்பு இன்று தமது கடப்பாடுகளை செவ்வனே நிறைவேற்றி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் இதுவரை நிறைவுபெறாத தமது போராட்டம் பற்றியும் தமது மக்கள் தொடர்ந்து அனுபவிக்கும் அல்லல்கள் தொடர்பாகவும் சர்வதேச சமூகத்துக்கும் தென்னிலங்கை மக்களுக்கும் எடுத்துக்கூற பல்வேறு வகையிலும் பிரசார வேலைத்திட்டங்களை புலிகள் முன்னெடுத்து வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1) தேதுன்ன என்ற சிங்களப் பத்திரிகை ஆரம்பித்து அதில் தமிழ் மக்களினதும் புலிகளினதும் போராட்டம், இலட்சியம் அவற்றுக்கு சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள் என்பவற்றை விளக்கி சிங்கள் மக்கள் மத்தியில் ஒர் பிரசார உத்தியை கையாண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;2) புலிகளது அரசியல் கொள்கைகள் தேர்தல் விஞ்ஞாபனமாக மக்கள் முன்வைத்து சிறீலங்கா நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்வர்களைக்கொண்டு கொழும்பில் வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் ஆகியோருக்கு தமிழ் மக்கள் பிரச்சினையில் சர்வதேச சமூகம் ஆற்றவேண்டிய பங்கு, பணி என்ன என்பவை குறித்து  விளக்கமளித்தது. அதற்காக தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐவர் கொண்ட அரசியல் விவகாரக்குழு புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனால் நியமிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;3) புலிகளி;ன் சில முக்கியஸ்தர்கள் நேரடியாக கொழும்புக்கு வந்தே சில முக்கிய இராஜதந்திரிகளுடன் பேச்சு நடத்தி தமது கொள்கை விளக்கங்களை மேற்கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;4) புலிகளின் அரசியல் விவகாரக்குழுவினர் மாதமொரு தடவை சுழற்சி முறையில் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை நேரடியாகச் சந்தித்தும் அங்கு இராஜதந்திரிகள் மற்றும் பன்னாட்டு அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்தும் தமது போராட்டத்தின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;5) இடையிடையே கொழும்பிலுள்ள சகல பத்திரிகையாளர்களையும் வன்னிக்கு அழைத்து முக்கிய விடங்கள் குறித்த தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியும் சிலவேளைகளில் அறிக்கைகள் வாயிலான அறிவிப்புகளாகவும் தமது கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உத்திகளால் இன்று புலிகள் தொடர்பான சர்வதேச நிலைப்பாடு சிறீலங்கா அரசே எதிபாராத அளவுக்கு மாற்றம கண்டுவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. கனடாவில் புலிகளை தடைசெய்ய மேற்கொள்ளப்பட்ட பகீரதப்பிரயத்தனம் புஸ்வாணமாக மாறியமை இதற்கொரு உதாரணமாகக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒரு பிரசார படிமுறைகளின் அங்கம்தான் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள ஈழத் தேசிய தொலைக்காட்சி. இதன் ஊடாக புலிகள் உடனுக்குடன் தமது செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்துவர்.&lt;br /&gt;ஆனால் இந்த பிரசார இயந்திரத்தின் காத்திரத்தை ஊகித்துக்கொண்ட சிறீலங்கா அரசும் அதன் அடிவருடிகளும் புலிகளின் உண்மையான நோக்கத்தை பிழையான வழியில் பிரசாரப்படுத்துவதில் முழுமூச்சாக உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது இனி உண்மைகளை மூடிமறைத்து தென்னிலங்கை மக்களுக்கு கப்ஸா அடிக்கும் அரசின் பாச்சா பலிக்காது.&lt;br /&gt;புலிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக இலங்கைக்கு வந்த ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனானையே வன்னி செல்ல அனுமதிக்காத சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, புலிகளின் புதிய முயற்சியால் சர்வதேச சமூகத்தின் மத்தியில் மேலும் மாற்றமடையப்போகும் புலிகள் தொடர்பான நிலைப்பாடு குறித்தும் தான் இவ்வளவு காலமும் ஆஸ்தான வித்தகர் கதிர்காமரை அனுப்பி மேற்கொண்ட பிரசாரமெல்லாம் விழலுக்கு இறைத் நீராகிவிடுமோ என்பது குறித்தும் கலங்கிவிட்டார். உடனே தனக்கு அருகிலேயே வைத்திருக்கும் அரசியல் அடியாட்களான ஜே.வி.பியை கிளறிவிட்டுவிட்டு தான் சத்தமில்லாமல் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு போராட்ட அமைப்பினது ஊடகத்தையும் அதற்கு எதிரான அரசு வளரவிட்டதாக சரித்திரம் இல்லை. ஏனெனில் யுத்தத்தில் படையணி ஒட்டுமொத்தமாக பாவிக்கும் ஆயுதங்களுக்கு சரிசமமான வலுக்கொண்டது ஒரு ஊடகம். அதனால்தான் ஆப்கானுக்குள் தனது ஆக்கிரமிப்பு கால்களை எடுத்து வைக்கமுன்னர் அமெரிக்கா செய்த முதல் வேலை பின்லேடனின் பேட்டிகள் மற்றும் அமெரிக்காவின் அட்டூழியங்களையும் பட்டவர்த்தனமாக காண்பித்துவந்த 'அல் ஜஸீரா" தொலைக்காட்சியை முதலில் தாக்கியது.&lt;br /&gt;ஈராக்கில் அமெரிக்கா போரை ஆரம்பித்த பின்னரும் சதாமின் காட்சிகளை ஒளிபரப்பிவந்த பக்தாத் தொலைக்காட்சிச் சேவையை குண்டுவீசி தகர்த்தது. சிறீலங்கா அரசும் சும்மா நின்று விடவில்லை.&lt;br /&gt;யுத்தகாலத்தல் யாழ். குடாநாட்டில் அரசு குண்டுவீச்சுகளால் கொன்றொழிக்கப்பட்ட மக்களின் படங்களையும் செய்திகளையும் அப்போது வெளியிட்டுவந்த பத்திரிகை ~உதயன். அதன் செய்திகளை அப்போது தூக்கிப்பிடித்த மனித உரிமை அமைப்புக்களும் பன்னாட்டு சமூகமும் சிறீலங்கா அரசை கடிந்தன.&lt;br /&gt;உடனே சிறீலங்கா அரசு உதயன் பத்திரிகையை தடைசெய்தது. அதேபோல அரசின் அட்டூழியங்களை தென்னிலங்கையில் விமர்சித்தவந்த ~சண்டே லீடர் பத்திரிகையையும் தடைசெய்தது. இந்தக் கைங்கரியங்களை செய்தவர் அப்போது ஆட்சியிலிருந்த இதே சந்திரிகா குமாரதுங்கதான். இன்று மீண்டும் கொடுகொட்டி ஆடத்தொடங்கிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜே.வி.பி உட்பட சில புலி எதிர்ப்பு அமைப்புக்களின் ஊடாக புலிகளின் புதிய ஊடகத்துக்கு எதிரான பிரசாரத்தை முடுக்கிவிட்டிருப்பதுடன் தென்னிலங்கை ஊடகங்களிலும் சில பத்தி எழுத்தாளர்கள் மற்றும் செய்தியாளர் ஊடாக எதிர்பிரசார வேலைகளை தட்டிவிட்டிருக்கிறார் ஜனாதிபதி சந்திரிகா.&lt;br /&gt;வான்புலிகள் விவகாரத்தின்மூலம் புலிகளை இக்கட்டில் மாட்டிவிட முழுமூச்சாக நின்ற அரசின் வாய்க்கு தற்போது தொலைக்காட்சி விவகாரம் ருசியான அவல். மென்று கொண்டிருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11870784-111288306753523093?l=ankusam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ankusam.blogspot.com/feeds/111288306753523093/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11870784&amp;postID=111288306753523093' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111288306753523093'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111288306753523093'/><link rel='alternate' type='text/html' href='http://ankusam.blogspot.com/2005/04/blog-post_07.html' title='அரசின் ஊதகமும் புலிகளின் ஊடகமும்'/><author><name>தெய்வீகன்</name><uri>http://www.blogger.com/profile/16880283989260916474</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11870784.post-111274901378501849</id><published>2005-04-05T17:49:00.000-07:00</published><updated>2005-04-05T17:56:53.790-07:00</updated><title type='text'>ஆரோகணிக்கும் அமளிதுமளியும்...</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;ஆரோகணிக்கும் அமளிதுமளியும் அவரோகணிக்கும் அமைதிமுயற்சியும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு இரண்டுவருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து உயர்நீமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து இலங்கையில் அரசியலில் சூறாவளி வீச ஆரம்பித்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை வசைபாடும் ஐக்கிய தேசியக்கட்சி, நீதியரசர் தலைமையில் ஐந்து நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு மேன்முறையீடு செய்யமுடியாத சட்டச் சிக்கலால் திணறுண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு நகர முடியாமல் திண்டாடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;  ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அணியிலிருந்து ஒருகாலத்தில் ஐ.தே.க.வை வசைபாடிக் கொண்டிருந்த எஸ்.பி.திஸநாயக்க, கொழும்பு நகரமண்டபக் குண்டுவெடிப்பில் ஜனாதிபதி சந்திரிகா கண்ணில் காயம்பட்ட வேளையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்குற்றி 'எனது தலைவிக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டுவிட்டதே" என்று வாய்விட்டு அழுதார். அவ்வளவு தூரம் ஜனாதிபதியின் விசுவாசியாக இருந்த எஸ்.பி.திஸநாயக்க ஜி.எல்.பீரிஸ், மஹிந்த விஜயசேகர ஆகியோருடன் 1999 ஆம் ஆண்டு ஐ.தே.க. வுக்குத் தாவிய நாள்முதல் தனது நிலைப்பாட்டைத் தலைகீழாக மாற்றியிருந்தார். ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எதிரான பேச்சு கேட்பதானால் எஸ்.பி.திஸநாயக்க பங்குபற்றும் கூட்டத்துக்குத்தான் போகவேண்டும் என்ற ஒருநிலை நிலவியது. இவரது இதே பாணியை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண கடைப்பிடித்து வந்தபோதும் அவ்வப்போது அவர் ஜனாதிபதியுடன் சமரசமாவது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;  இதனால் எஸ்.பி.திஸநாயக்கவின் மீதுமட்டும் ஜனாதிபதிக்கு தீராத காழ்ப்புணர்ச்சி என்றுமே இருந்து வந்தது. 2001 ஆம் ஆண்டு தேர்தலில் ஐ.தே.க வென்று அமைச்சரவை பொறுப்பேற்றபோது சமுர்த்தி விவகார அமைச்சை எஸ்.பி.திஸநாயக்கவுக்குக் கொடுக்காமல் அவர் ஒரு 'ஊழல்பேர்வழி" என்று ஜனாதிபதி குற்றச்சாட்டியமையும் கடைசியில் விசாரணைகளில் வென்று எஸ்.பி. மீண்டும் சமுரத்தி விவகார அமைச்சைப் பெற்றுக் கொண்டமையும் அமைச்சராகச் சத்தியப்பிரமாணம் செய்து அமைச்சரவைத் தலைவர் என்ற முறையில் ஜனாதிபதியிடம் பதவிப் பிரமாணப் பத்திரத்தை வாங்கும்போது ஜனாதிபதி அவரை நிமிர்ந்தும் பார்க்காத நிகழ்வும் இருவருக்கும் இடையில் நிலவிய தீராத அரசியல் பகையை எடுத்துக்காட்டும் சில உதாரணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;  அப்படிப்பட்ட வைரியான எஸ்.பி.திஸநாயக்கவைக் காத்திருந்து கழுத்தறுத்து விட்டார்; நீதித்துறைக்குள்ளும் புகுந்து விளையாடிவிட்டார் என்று ஜனாதிபதி மீது சேற்றை அள்ளிவீசியுள்ளனர் ஐ.தே.கவினர். எஸ்.பி.திஸநாயக்க கைது செய்யப்பட்ட பின்னர் நாடாளுமன்றில் கொதித்தெழுந்த ஐ.தே.க.வினர் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளனர். அங்கு முன்னாள் அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரட்ண பேசுகையில்-&lt;br /&gt;  'நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் எஸ்.பி.திஸநாயக்க கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளார். ஆனால் நீதித்துறையின் நிர்வாகத்திற்கு பயங்கரமாக அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஒருவர் நடந்துகொண்டால் மாத்திரமே அதனை நீதிமன்ற அவமதிப்பாகக் கொள்ளலாம் என்பதை நீதிபதிகள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் கடந்த காலங்களில் பல நாடுகளில் இந்த சட்டம் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கடந்த வாரம் யுனெஸ்கோ ஏற்பாட்டில் ஹரியானாவில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது"- என்று தொடங்கி ஸ்ரீலங்காவின் நீதித்துறையை தாறுமாறாக விமர்சித்திருக்கிறார். அவரது பேச்சின் பெரும்பாலான பகுதியை நாடாளுமனற உரைப்பதிவேடான ஹன்ஸாட்டிலிருந்து நீக்கும்படி சபாநாயகர் உத்தரவிடுமளவுக்கு ராஜிதவின் உரை மிகக் கடுமையாக நீதித்துறையைச் சாடியிருந்நது. மகேஸ்வரன் உட்பட ஐ.தே.கவின் எம்.பிக்கள் அனைவரும் நாடாளுமன்றில் ஸ்ரீலங்கா நீதித்துறையை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;  மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேப்பிட்டிய படுகொலை செய்யப்பட்டதிலிருந்தே புயல் வீச ஆரம்பித்த ஸ்ரீலங்கா நீதித்துறையில் ஓட்டைகள் உள்ளதாகவும் அதில் அரசியல் புகுந்து விளையாடுவதாகவும் ஜனாதிபதி தனது அரசியல் வைரிகளைப் பழிவாங்க நீதித்துறையைப் பயன்படுத்துகிறார் என்றும் குற்றம்சாட்டி ஐ.தே.க.வினர் அதன் கட்டமைப்பின் அத்திவாரத்தையே அசைக்க முற்பட்டுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;  தாம் மேற்கொள்ளும் அமைதி முயற்சிகளுக்குத் தெற்கில் எழுந்துள்ள இனவாத எதிர்ப்பைச் சமாளிக்க அரசியல் செல்வாக்குச் செலுத்தும் ஸ்ரீலங்காவின் நீதித்துறையைப் பயன்படுத்தி புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 200 வருட சிறைத் தண்டனை விதித்தது ஐ.தே.கவின் திரைமறைவுத் திட்டம்தான் என்று முன்னர் குற்றச்சாட்டு முன்வைக்கப் படுகையில், அதை மறுத்த ஐ.தே.க. 'சட்டமும் நீதியும் தமது கடமையைச் செய்கின்றன. நாமொன்றும் அதில் தலையிடவில்லை.தலையிடவும் முடியாது." என்று நியாயம் பேசியது. இன்று தமது தரப்பு அதே நீதித்துறையால் பாதிக்கப்படுகையில் நீதித்துறையை தாறுமாறாக விமர்சிப்பதுடன் அதன் தீர்ப்புகளில் கறைபடிந்துள்ளது என்றும் விரல் நீட்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;  தென்னிலங்கையில் உள்ள இந்த அரசியல் சித்து விiளாட்டுக்கள் ஒருபுறமிருக்க, ஐ.தே.க. குற்றம் சாட்டுவதுபோல் உண்மையிலேயே நீதித்துறையில் அரசியல் செல்வாக்குச் செலுத்தப்பட்டிருக்கிறதென்றால் தற்போதைய சூழ்நிலையில் அதன் தேவை ஏன் எழுந்தது என்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;  அதாவது இன்று அமைதி முயற்சிகளினை ஆரம்பிக்கவேண்டிய கட்டாய சூழ்நிலையில் ஜனாதிபதி உள்ளார். பேச்சுக்களை ஆரம்பிக்கா விட்டால் மீண்டும் போரை ஆரம்பிக்கப் போவதாக புலிகள் எச்சரிக்கை விடுக்க, பேச்சை ஆரம்பித்தால் தெற்கில் ஆயுதக்கிளர்ச்சி வெடிக்கும் என்று ஜே.வி.பி மறுபுறம் எச்சரிக்க, பேச்சுக்களை ஆரம்பிக்காவிட்டால் தற்போதைய அமைதிக்கு ஆதாரமான புரிந்துணர்வு ஒப்பந்தம் புஸ்வாணமாகிவிடும் என்று உலக நாடுகளுக்கு ஸ்ரீலங்காவின் சீத்துவத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டி அனுசரணைத் தரப்பும் அமைதி நிலையைக் கண்காணிக்கும் பணியாளர்களும் நெருக்கடியைக் கொடுக்க, அடுப்பிலிருந்து நெருப்பில் விழுந்த கதையாக ஆட்சியிலிருந்து கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் மிரண்டு போயுள்ளார் ஜனாதிபதி.&lt;br /&gt;&lt;br /&gt;  இந்நிலையில் தென்னிலங்கையில் சிங்கள மக்களும் சர்வதேச சமூகமும் அமைதி முயற்சியின் அடுத்தகட்டம் என்ன என்று எதிர்பார்த்துக் காத்திருக்க எஸ்.பி.திஸநாயக்க கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தால் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;  'அமைதி முயற்சிகள் என்று கூறிக்கொண்டு நாம் செய்ததைவிட என்ன புதிதாக சாதித்துவிட்டார்?" என்று கூறிக்கொண்டு ஜனாதிபதியின் நடவடிக்கைகளை விமர்சித்துக் கொண்டிருந்த ஐ.தே.க. தற்போதைக்கு அமைதி முயற்சி பற்றிச் சிந்திக்கத் தலைப்படுமா என்பது சந்தேகமே. அது போலவே நாட்டின் சட்டமியற்றும் பிரதான அவையான நாடாளுமன்றம் இன்று எஸ்.பியின் கைதை மையமாகக்கொண்டு போர்க்களமாக மாறியுள்ளது. நாடெங்கும் ஐ.தே.க. ஆதரவாளர்கள் தமது எம்.பி. ஒருவர் சிறைப்படுத்தப்பட்டதைக் கேட்டு கொதித்துப் போயுள்ளார்கள். மொத்தத்தில், அமைதி முயற்சியின் பாலிருந்த எதிர்பார்ப்பு தெற்கில் திசை திருப்பப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;  புலிகளின் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாளன்று ஆற்றிய உரையை அடுத்து நோர்வேயின் விசேட தூதுவர் சொல்ஹெய்மைத் தொடர்புகொண்ட ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 'பிரபாகரனின் உரையால் மீண்டும் சண்டை வரப்போகிறதோ என்று எழுந்துள்ள பதற்றமான சூழ்நிலையைத் தணிக்க உங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி ஒன்றும் செய்யமுடியாதா?" என்று விநயமாகக் கேட்டிருந்தார். ஆகவே பிரபாவின் உரையால் எழுந்த பதற்றத்தை - பேச்சுக்களை ஆரம்பிக்காமலேயே - தணிப்பதற்கு தீவிரமாக இருந்த ஜனாதிபதி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைதான்; எஸ்.பி.திஸநாயக்க கைது சம்பவமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. ஐ.தே.க. முன்வைக்கும் நீதித்துறை தொடர்பான குற்றச்சாட்டை எடுகோளாகக் கொண்டால் இத்தகைய சந்தேகத்தை இலகுவில் புறக்கணிக்க முடியாதுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;  அதேவேளை, ஜனாதிபதிக்கு இன்னொரு அவசர தேவையும் எஸ்.பி.யின் கைதுக்கு பிரதான காரணமாகியுள்ளது. அதாவது புலிகள் எச்சரித்துள்ளது போல் யுத்தம் ஆரம்பமானால் தென்னிலங்கை இளைஞர்களை வடக்கு கிழக்கில் பலிக்கடாக்கள் ஆக்கும் தனக்கு இனிமேல் மக்கள் செல்வாக்கு கிட்டப்போவதில்லை என்பதும் அதனால் தேர்தல், அதில் வெற்றி ஆகிய விடயங்களும் இனிமேல் எட்டாக் கனிகளே என்பதும் ஜனாதிபதிக்கு இப்போது புரிய ஆரம்பித்துவிட்டது. அத்துடன் ஜனாதிபதி பதவிக்காலமும் நிறைவுபெறும் தறுவாய் வந்துவிட்டது. இந்த வேளையில் தனது அரசியல் வைரிகளை அரசியல் லாபம் பெற்றுத்தரக் கூடியவாறு சங்காரம் செய்து பார்த்தால் என்ன? என்ற திட்டத்துடன் களத்தில் இறங்கியுள்ளார் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;  அவரது பட்டியலில் உள்ள இன்னொருவர் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க. ஜனாதிபதி சந்திரிகா அரசியல் விஞ்ஞானம் படித்து முடிக்காதவர் என்றும் அமைச்சரவைக்கு வரும்போது கைப்பையில் கமராவுடன் கைக்குண்டும் கொண்டுவந்தார் என்றும் பல குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதிக்கு எதிராக முன்வைத்தார். ஆட்சிக்கு வந்தபின்னர் ஜனாதிபதி அவரை 'அரிசி கொள்முதல் செய்யும்போது ஊழல் புரிந்தார்" என்ற குற்றச்சாட்டில் கைது செய்ய முனைந்தார். ஆனால் அந்த முயற்சி ஜனாதிபதிக்கு வெற்றியைத்தரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;  ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவைப் போலவே தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவும் தனது அரசியல் வைரிகள் மீது பழிவாங்கும் படலத்தை கொஞ்சக்காலமாகத் தொடர்ந்துவந்தார். கருணாநிதி, வைகோ, நெடுமாறன், இந்து பத்திரிகை என்றெல்லாம் அவர் நடத்திய பழிவாங்கும் நடவடிக்கைகள் இன்று அரசியல் படுதோல்வி மற்றும் மத்திய அரசு சட்டத்தால் கொடுத்த சாட்டையடி என பலகாரணங்களால் ஒடுங்கியுள்ளன.&lt;br /&gt;  அவரைப்போலவே ஜனாதிபதி சந்திரிகாவும் மாறியுள்ளார்.&lt;br /&gt;  அப்படியானால் தென்னிலங்கையின் இந்த அரசியல் குத்துக்கரணங்கள், சித்து விளையாட்டுக்கள் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டு தமிழ் மக்கள் பொறுமை காக்க வேண்டுமா? இனப் பிரச்சினைத்தீர்வு விடயத்தில் இன்னொரு தடவையும் காலத்தை இழுத்தடிக்கும் முயற்சியில் சிங்களதேசம் இறங்கிவிட்டதா?&lt;br /&gt;&lt;br /&gt;  கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்குமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11870784-111274901378501849?l=ankusam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ankusam.blogspot.com/feeds/111274901378501849/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11870784&amp;postID=111274901378501849' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111274901378501849'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111274901378501849'/><link rel='alternate' type='text/html' href='http://ankusam.blogspot.com/2005/04/blog-post_111274901378501849.html' title='ஆரோகணிக்கும் அமளிதுமளியும்...'/><author><name>தெய்வீகன்</name><uri>http://www.blogger.com/profile/16880283989260916474</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11870784.post-111271188461561790</id><published>2005-04-05T07:32:00.000-07:00</published><updated>2005-04-05T07:38:04.620-07:00</updated><title type='text'>உடைக்கப்படும் ஒப்பந்தங்களும்...</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;உடைக்கப்படும் ஒப்பந்தங்களும் துடைக்கப்படும் துப்பாக்கிகளும்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அமைதி முயற்சி, சமாதானப் பேச்சுக்கள் என்ற புனைபெயர்களில் தமிழினத்தின் மீது இனவாதச்சவாரி விடும் தென்னிலங்கை ஆட்சிபீடம், புலிகளின் முக்கிய தலைவன் ஒருவனை திட்டமிட்டு ஏப்பம் விட்டுவிட்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;  அரச கட்டுப்பாட்டுப்பகுதியில் வைத்து விடுதலைப்புலிகளின் மட்டு.-அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு எழுந்தமானமாக பதிலளிக்கும் சிங்கள தேசம், அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் வரும் முன்னர் கௌசல்யன் தனது வருகை பற்றி இராணுவத்துக்கு அறிவிக்கவில்லை என்று வியாக்கியானம் கூறுகிறது.&lt;br /&gt;  இதிலிருந்து வெட்ட வெளிச்சமாக விளங்கும் விடயம் என்னவெனில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்ன குறிப்பிடப்பட்டு;;ள்ளது என்பதை அறியாமலே அரசும் அதேவேளை தாம் போடுவது சட்டம் என்ற தோரணையில் படைகளும் தம்பாட்டுக்கு செயற்பட்டு வருகின்றன என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;  சிறீலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதலாவது சரத்தில் 13 ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-&lt;br /&gt;  'ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகின்ற நாளிலிருந்து 30 நாட்களின் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களுக்குள் அரசியல் பணிக்காகஐம்பது ஆயுதம் தரிக்காத விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவர். ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகின்ற நாளிலிருந்து 60 நாட்களின் பின்னர் இன்னொரு நூறு ஆயுதம் தரிக்காத விடுதலைப்புலிகளின் இயக்க உறுப்பினர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவர். ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகின்ற நாளிலிருந்து 90 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்து உறுப்பினர்களும் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் தமது அடையாளத்தை நிரூபிப்பதற்கான ஆவணங்களை கொண்டுசெல்ல வேண்டும்."&lt;br /&gt;&lt;br /&gt;  அதாவது, ஒப்பந்தம் கைச்சாத்தாகி 3 மாதங்களுக்கு பின்னர் இருபகுதியினரும் மறுபகுதியினரின் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் ஆயுதங்கள் இன்றி சுதந்திரமாக நடமாடமுடியும். இதற்கு யாரும் யாருடைய பாதுகாப்பு அனுமதியும் பெறத்தேவையில்லை. மறுதரப்பின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தினுள் செல்வது பற்றி அறிவித்தால் போதுமானது.&lt;br /&gt;&lt;br /&gt;  அதுவே இவ்வளவு காலமும் பேணப்பட்டுவந்த நடைமுறை. விடுதலைப்புலிகளின் பல முக்கியஸ்தர்கள் அரசியல் பணி மற்றும் மருத்துவ தேவைகளுக்கான இவ்வாறான ஒரு ஒழுங்கு முறையின் கீழேயே தமது பயணங்களை மேற்கொண்டுவருகின்றன. பெரிய எண்ணிக்கையிலான விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கிற்கு இடையில் பயணம் செய்யும்போதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு அனுமதி கோருவது வழக்கம். கண்காணிப்புக்குழுவும் இது விடயத்தில் இவ்வளவு காலமும் தெளிவாகப் பணியாற்றிவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;  ஆனால், கௌசல்யன் படுகொலையில் தம்மீது விழுந்துள்ள பெரும்பழியை சுலபமாக நிராகரிப்பதற்கு இப்படியொரு காரணத்தை இராணுவத்தரப்பு தூக்கியுள்ளது.&lt;br /&gt;  அரச கட்டுப்பாட்டுப் பகுதியென்றால் அங்கு அரச படையினரின் மேலாண்மை உள்ளது என்று அர்த்தம். அப்படியில்லாவிடில் அரசின் பாதுகாப்பு விடயத்தில் பெரிய ஓட்டை உள்ளது. அரச கட்டுப்பாட்டுப்பிரதேசத்திலேயே இன்னொரு தரப்பு ஆட்சி நடத்துகிறது என்று பொருள். தற்போது இடம்பெற்ற கொலைக்கும் தமக்கும் தொடரபில்லை என்று இராணுவம் கூறுவதன் மூலம் அங்கு இன்னொருதரப்பின் ஆட்சி நடக்கிறது என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறதா? அப்படியானால், தென்னிலங்கை ஆட்சியாளர்களும் வார்த்தைக்கு வார்த்தை கூறும் நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு என்பவற்றுக்கெல்லாம் என்னவாயிற்று?&lt;br /&gt;  ஆயுதக்குழுக்களின் அனுசரணையுடன்தான் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்றளவுக்கு வந்துவிட்ட அரசு, நாட்டுமக்களை காப்பாற்றும். சரிந்துள்ள பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் என்றெல்லாம் எப்படி உறுதிகொள்ள முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;  கௌசல்யன் படுகொலை விடயம் அரசைப்பொறுத்தவரை ஒரு அறிக்கையில் கவலை தெரிவிக்கும் சிறிய விடயமாக இருக்கலாம். ஆனால், தமிழ்மக்கiயும் அவர்களின் பிரதிநிதிகளான விடுதலைப்புலிகளையும் பொறுத்தவரை தமது தலைவர்களில் ஒருவனை இழந்த துயுரம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வைத்து அரச அமைச்சர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டால் அரசுக்கு எப்படியிருக்குமோ அவ்வளவு வேதனையையும் கவலையையும் ஒவ்வொரு தமிழ்மகனும் கொண்டுள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;  விடுதலைப்புலிகளின் நீண்டகால உறுப்பினரான கௌசல்யனின் அறிமுகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் அனைத்துத்தரப்பின் மத்தியிலும் அவரது பணியின் மீதான ஈர்ப்பை ஏற்படுத்தியிருப்பினும் நீண்டகாலமாக விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து அவர் போராட்டத்துக்கு ஆற்றிய பங்கு, பணிகள் அளப்பெரியவை.&lt;br /&gt;&lt;br /&gt;  கௌசல்யன் எனப்படும் இளையதம்பி லிங்கராஜா 1972ம் ஆண்டு மார்ச் 25ம் திகதி மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பண்டாரிவெளி என்ற இடத்தில் பிறந்தார். தமிழர் தாயகத்தில் இந்திய இராணுவம் ஆக்கிரமிப்பை மேற்கொண்டிருந்த வேளையில் - 1989ம் ஆண்டு ஜூன் 28ம் திகதி - தனது 17வது வயதில் இவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;  மட்டக்களப்பின் வடக்குப்பகுதியில் இந்திய இராணுவத்திற்கு எதிரான விடுதலைப்புலிகளின் தாக்குதல் அணியில் அங்கம் வகித்த இவர், அக்காலப்பகுதியில் மிகுந்த முனைப்புடன் தாயக மீட்புப்போரில் ஈடுபட்டார். விடுதலைப்புலிகளின் மேலாண்மை கிழக்கில் நிலைநாட்டப்பட்ட பின்னர் மனோ மாஸ்டரின் தலைமையின் கீழ் இவர் புலிகளின் இராணுவப் பயிற்சிக்கல்லூரியில் பயிற்சி பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;  பின்னர், நிர்வாகம் சம்பந்தமான நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டிய கௌசல்யன் விரைவாக அதில் தேர்ச்சிபெற்றார். அக்காலப்பகுதியில்; விடுதலைப்புலிகள் அமைப்பில் மிகவும் வயதில் குறைந்தவராகக் காணப்பட்டபோதும் தனது திறைமையினால் தலைமையின் நம்பிக்கையை வென்றார்.&lt;br /&gt;  1993-1994ம் ஆண்டு காலப்பகுதியில்-விடுதலைப்புலிகள் கிழக்கில் மிகுந்த நெருக்கடியை எதிர்நோக்கிய காலப்பகுதியில்- விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட நிதிப்பொறுப்பாளராகச் செயற்பட்டு சவால்களை சமாளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;  1995ம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்கு கணக்காய்வு உட்பட நிதித்துறை சார் விடயங்களைக் கற்றார். இதன் பின்னர், இவர் நிதித்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். கரிகாலன வகித்த மட்டக்கப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் பதவி 2002ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;  2002ம் ஆண்டு ஒக்டோபரில் தாய்லாந்து நக்கொம் பத்தோம் நகரில் சிறீலங்கா அரசுப் பிரதிநிதிகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களில் தீர்மானிக்கப்பட்டபடி அமைக்கப்பட்ட இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான உபகுழுவில் விடுதலைப்புலிகள் தரப்பில் கௌசல்யனும் நியமிக்கப்பட்டிருந்தார்.&lt;br /&gt;  கருணாவின் கீழ் நிதித்துறையில் முன்னர் பணியாற்றி மோசடிக்குற்றச்சாட்டு சுமத்தப்படாத ஒரேயொருவர் கௌசல்யன்தான். கௌசல்யன் நிதிப்பகுதியிலிருந்து அரசியல் துறைக்கு மாற்றலான பின்னரே கருணாவின் பணமோசடி உட்பட திருகுதாளங்கள் ஆரம்பித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;  கருணாவின் அட்;டகாசங்களும் எதேச்சதிகார செயற்பாடுகளும் கிழக்கில் முளைவிடத் தொடங்கியபோது கருணாவுடன் வாக்குவாதப்பட்டார். தலைமைக்கு துரோகமிழைக்கும் நடவடிக்கைகளை விட்டுவிடும்படியும் தலைவரின் அழைப்பை ஏற்று வன்னிக்குச் செல்லுமாறு கருணாவுக்கு ஆலோசனை கூறினார். ஆனால் கருணா முரண்டுபிடித்துக் கொண்டு நின்றதால் தளபதிகளான ரமேஷ், பிரபா, ராம், ரமணன், ரொஷான், நளன், ஜிகாத்தன் மற்றும் முக்கியஸ்தர்களுடன் தலைமையிடம் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;  கருணா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டதாக விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் உத்தியோகபூர்வமாக அறிவித்த 2004ம் ஆண்டு மார்ச் 6ம் திகதி செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையில் - 'இது ஒரு தனிமனித பிரச்சினை. எமது அமைப்பு வரலாற்றில் இப்படி எத்தனையோ சம்பவங்களைச் சந்தித்திருக்கிறது. இதனால் எமது போராட்டமும் இலட்சியமும் எந்த விதத்திலும் பாதிக்கப்படமாட்டாது."- என்றார்.&lt;br /&gt;  2004ம் ஆண்டு மார்ச் 22ம் திகதி கௌசல்யன் கொக்கட்டிச் சோலையை அம்பிலாந்துறையைச் சேர்ந்த புஷ்பா என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது புஷ்பா 7 மாதக் கர்ப்பிணி.&lt;br /&gt;&lt;br /&gt;  தலைமையின் ஆலோசனையுடன் அரசியல் நடவடிக்கைகளில் திறைமையாக இயங்கிவந்த கௌசல்யன், கிழக்கில் தமிழ்-முஸ்லிம் நல்லுறவை வலுப்படுத்தும் பணியில் பாரிய பங்களிப்பை நல்கினார். தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் கலவரங்களை தூண்டி விடுவதற்கு சில சக்திகள் முனைப்புடன் செயற்பட்டு வந்தபோதும் அவற்றையெல்லாம் மிகவும் பொறுமையாக நிதானமாக முறியடித்து கிழக்கில் பொது அமைப்புக்கள் மற்றும் படைத்துறையின் மத்தியிலும் கூட நல்ல பெயரை சம்பாதித்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;  தற்போது இவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் கிழக்கு படை அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்- கௌசல்யனின் நிர்வாகத்திறன் குறித்து நினைவு கூறியுள்ளார்.  கடைசியில் கௌசல்யனுக்கும் பயணத்தில் பழி தீர்க்கும் தனது வழமையான பாணியை ஏவி காரியத்தை சாதித்துவிட்டது சிறீலங்கா அரசு.&lt;br /&gt;  இந்திய இராணுவம் தமிழர் பகுதிகளில் நிலைகொண்டிருந்த வேளையில் 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் புலிகளின் முக்கிய தலைவர்களான் குமரப்பா, புலேந்திரன் ஆகியோர் உட்பட பன்னிருவர் வட கடலில் வைத்து அநீதியான முறையில் கைது செய்யப்பட்டு ஜே.ஆரின் சதிவலையில் சிக்கி உயிரை மாய்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;  1993 ஜனவரியில் தாய்லாந்திலிருந்து தாயகம் திரும்பிக்கொண்டிருக்கையில் விடுதலைப்புலிகளின் இன்னொரு முக்கியஸ்தரான கிட்டு இலங்கை-இந்திய சதிவலையில் சிக்கி உயிரை மாய்த்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;  புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் விடுதலைப்புலிகளின் இரண்டு வர்த்தகக்கப்பலகள் பேராளிகளுடன் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் சர்வதேச கடற்பரப்பில் வைத்து சிறீலங்கா கடற்பரப்பில் வைத்து தாக்கி மூழ்கடிக்கப்பட்டன. இந்தத்தாக்குதலுக்கு உத்தரவுகளை வழங்கி கச்சிதமாக காரியத்தை முடித்த கடற்படைத்தளபதிக்குத்தான் மூன்று வருட பதவி நீடிப்பு வழங்கி ஜனாதிபதி சந்திரிகா அவரை வலதுகையாக வைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;  இந்த சம்பவங்களைவவிட விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர்களும் போராளிகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டுவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;  இவ்வளவுக்கும் விடுதலைப்புலிகள் பொறுமையுடனேயே உள்ளர். அமைதி தீர்வின் மீதும் சமாதான முயற்சி பற்றியும் தமது பற்றுறுதியை வெளிப்படுத்தி வருகின்றனர். விடுதலைப்புலிகளின் இந்தப்பொறுமையை இன்று உலக நாடுகளே உணர்ந்து பாராட்டியிருக்கின்றன. கௌசல்யன் படுகொலைக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்தமையும் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்தமையும் விடுதலைப்புலிகளி;ன் நியாயமான போராட்டத்தையும் உறுதியான கொள்கைகைளும் நிலையான இலட்சியத்தையும் உணர்ந்துள்ளதின் வெளிப்பாடே ஆகும்.&lt;br /&gt;  ஆனால் இந்தப்பொறுமையை தொடர்ந்தும் சிறீலங்கா அரசு சோதிக்கும்போது அதன் விளைவுகள் விபரீதமாகும் என்பது மறுக்கமுடியான உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;  பேச்சு, சமாதானம் என்று காலத்தை இழுத்தடிக்கும் இந்த வேலைகளுக்கு சமாந்தரமான விடுதலைப்புலிகள் இயக்கத்தை வலுவிழக்கச்செய்யும் தவணை முறையிலான வேலைத்திட்டங்களில் அரசு தீவிரமாக உள்ளதை நிகழ்கால சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;  அத்துடன், இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உரிமைப்போராட்டங்கள் நடைபெறும்போது அந்நாட்டு அரசுகள் மக்கள் மத்தியில் பல வசதிகளை செய்துகொடுத்து, இவ்வளவும் கிடைக்கும்போது ஏன் உரிமைப்போர் என்ற தோற்றப்பாட்டை தோற்றுவித்து போராளிக்குழுக்களை நாட்டை விட்டுத்துரத்துவதற்கு பயன்படுத்திய தந்திரோபாயத்தை சிறீலங்கா அரசும் பலபடிமுறைகளில் மேற்கொண்டு வருகின்றமை வெளிப்படை உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;  ஆனால், அரசு அவ்வாறான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றமை அதில் இன்னமும் வெற்றி காணப்படவில்லை என்பதையே உணர்த்தி நிற்கிறது.&lt;br /&gt;  விடுதலைப்புலிகளை வலுவிழக்கச்செய்யும் இப்படியான வேலைகள், விடுதலைப்புலிகள் வலுவிழக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்கு வழிகோலும் என்பதில் ஐயமில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11870784-111271188461561790?l=ankusam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ankusam.blogspot.com/feeds/111271188461561790/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11870784&amp;postID=111271188461561790' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111271188461561790'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111271188461561790'/><link rel='alternate' type='text/html' href='http://ankusam.blogspot.com/2005/04/blog-post_05.html' title='உடைக்கப்படும் ஒப்பந்தங்களும்...'/><author><name>தெய்வீகன்</name><uri>http://www.blogger.com/profile/16880283989260916474</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11870784.post-111260750210455862</id><published>2005-04-04T02:23:00.000-07:00</published><updated>2005-04-04T02:38:22.313-07:00</updated><title type='text'>சொத்தித் தலைக்கு.....</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;சொத்தித் தலைக்கு சோடனையை மாற்றி என்ன பயன்?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேக்கி வைத்திருக்கும் அமைதி முயற்சிகளின் ஊடாக தமிழரின் தேச விடுதலைப் போராட்டத்தை படிப்படியாக அழித்துவிடலாம் என்று சிங்களத் தலைமைகளுக்கே உரித்தான சூழ்ச்சி நயத்துடன் சந்திரிகா அரசு செயற்பட்டு வருகின்றமை அது இரட்டை வேடம் தரித்து ஆடும் சமாதான நாடகத்தில் யுத்த காண்டம் அரங்கேறும் அறிகுறிகளை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;  இந்த இக்கட்டான நிலையை எதிர்கொள்ள இன்று சிங்கள அரசியல் கட்டமைப்பிலும் சரி இராணுவக் கட்டமைப்பிலும் சரி உறுதியான நிலைமை இல்லை. சவாரி வண்டி சறுக்கிய கதையாக ஆளும் கூட்டணி அரசு அல்லோலகல்லோலப்பட இன்னொரு பக்கத்தில் பிணத்துக்கு இரத்ததானம் செய்ததுபோல் யுத்தமொன்றுக்கு உள ரீதியாகத் தயாரில்லாத- விருப்பமில்லாத - இராணுவத்தை பலிக்கடாக்களாக சமர்க்களத்தில் சவாரிவிடுவதற்கு விளையாட்டுப்பொருட்கள் போல் ஆயுத தளபாடங்களை வாங்கிக் குவித்திருக்கிறது சந்திரிகா அரசு. அதுவும் இந்த சமாதான காலத்தில் - பட்ஜட்டில் பலகோடி ரூபா துண்டு விழுந்து நாடு இக்கட்டான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள வேளையில் - அரசு தனது முப்படைகளுக்கும் கோடிக் கணக்கில் ஆயுத தளபாடங்களை வாங்கிக் குவித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;  அமெரிக்க இராணுவப் புலனாய்வு அதிகாரியும் இராணுவ ஆய்வாளருமான பிரயன் ப்ளொகட் இலங்கையின் படைக் கட்டமைப்புகள் குறித்த தனது ஆய்வுப் புத்தகத்தி;ல் இவ்விடயம் பற்றி விலாவாரியாக விவரித்திருக்கிறார்.&lt;br /&gt;  'சமாதான காலத்தில் இலங்கை வான்படைக்கு புதிதாக பத்து எம்.ஐ.-25 ஹெலிக்கொப்டர்களை அரசு கொள்வனவு செய்துள்ளது. இதனால் தற்போது வான்படையிடம் உள்ள தாக்குதல் ஹெலிக்கொப்டர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்தள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;  'அத்துடன் காலாற் படையின் பிரதான தேவையான ஆட்லறிகளின் எண்ணிக்கையை அரசு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 2001 ஆம் ஆண்டு 97 ஆட்லறிகளைக் கொண்டிருந்த இராணுவம் 2002 இல் அந்தத் தொகையை 157 ஆக அதிகரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;  'புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் அரசு 40 யுத்த டாங்கிகளைக் கொள்வனவு செய்திருந்தது. ஆனால் அதன் பின்னரும் மேலதிகமாக 25 யுத்த டாங்கிகளை வாங்கி அடுக்கி விட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;  'படைக் கட்டமைப்புக்களுக்கான ஆயுத  தளபாடக் கொள்வனவில் டாங்கிகள், ஆட்லறிகள், ஹெலிக்கொப்டர்கள் ஆகியவற்றில் அரசு தனது நீண்ட பாய்ச்சலைக் காட்டியிருக்கிறது" என்கிறார் பிரயன்.&lt;br /&gt;&lt;br /&gt;  அடுத்ததாக படைகளின் ஆளணியை நோக்கினால் படைகளிலிருந்து தப்பி ஓடியவர்களை மீண்டும் படையில் சேர்ப்பதற்கு அரசு படாத பாடுபட்டது. எத்தனையோ பொது மன்னிப்புக்களை வழங்கியது. ஆனால் கடந்த காலங்களில் யுத்தத்தின் கோரத்தை உணர்ந்த படையினர் கடைசிவரை மீள இணைந்து கொள்ளவில்லை. இதனால் அரசுக்கு இந்த முயற்சி படுதோல்வியையே அளித்தது. ஆனால் சமாதான காலமென்றவுடன் சண்டையிராது என்ற நம்பிக்கையுடன் விசேட சலுகைகளை கண்டு மதிமயங்கி படைகளில் புதிதாக இணைய வந்தவர்களில் அரசு பாரிய அறுவடை கண்டிருக்கிறது. அதாவது யுத்தநிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் - 2002 இன் பின்னர் - இராணுவத்தின் எண்ணிக்கை 95 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 18 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;  ஆனால் புதிததாக ஆட்களைச் சேர்ப்பதில் அரசு வெற்றி காணவில்லை என்றும் தப்பி ஓடிய படையினர் திரும்பி வந்ததால்தான் படையினருக்கு இந்தத்தொகை கிட்டியது என்கிறார் இயன்.&lt;br /&gt;&lt;br /&gt;  கடற்படையைப் பொறுத்தவரை யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் தனது ஆட்சேர்ப்பை அது தொடங்கி மொத்த எண்ணிக்கையை 80 ஆயிரம் பேராகக் கூட்டி 2003 இல் அந்த எண்ணிக்கையை 20 ஆயிரத்து 600 என்ற பாரிய வளர்ச்சியை எட்டியது என்று தெரிவித்துள்ளார் இயன்.&lt;br /&gt;  இதேவேளை அமெரிக்காவிடம் இலங்கை அரசு வாங்கிய கரையோரக்காவல் ரோந்துக்கப்பல் அடுத்தமாதம் 9 ஆம் திகதி அமெரிக்காவிலிருந்து புறப்படுகிறது. இந்தக் கப்பல் துருப்பினர் அமெரிக்காவிலேயே பயிற்சி பெற்று வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;  இது இவ்வாறிருக்க இந்தியாவுடன் புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் ஆயுதஉதவி ஆகியவை உட்பட பல விடயங்களில் பலமான பாதுகாப்பு உதவிக்குப் பாலமிடத் தயாராகியுள்ளது இலங்கை அரசு.&lt;br /&gt;  மேற்குறிப்பிட்ட குறிப்புகளை ஆழமாக நோக்கினால் சில விடயங்கள் தெளிவாகத்தெரிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;  அதாவது நீண்டகாலமாக - மூன்று வருட காலமாக - யுத்தமின்றி அரசுப் படைகளுடன் அவற்றின் ஆயுத தளபாடங்களும் பயன்பாடு இன்றிக்கிடந்துள்ளன. இவற்றில் சில தற்போது பயன்படுத்த முடியாமல் போயிருக்கலாம். சில ஆயுதங்களால் எதிர்காலப் போர்க்கள வெற்றிகளை பெறமுடியாமல் போகலாம். சில ஆயுதங்களின் அதே ரகமானவை புலிகளிடம் இருக்கலாம். ஆகவே இந்தக் குறைகளை ஒட்டுமொத்தமாக நிவர்த்தி செய்வதற்காக அரசு தற்போது யுத்தமொன்றுக்குத் தேவையான சகல ஆயுத தளபாடங்கள் மற்றும் இராணுவ உதவிகளை மொத்தமாகப் பெற்றுக்கொள்ள பலவழிகளை நாடியுள்ளது. அவற்றில் இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்த முஸ்தீபும் அமெரிக்காவின் கப்பல் கொள்வனவும் முக்கிய காரணிகள் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;  ஏனெனில் அரசைப்போல புலிகளும் நீண்டகாலம் யுத்தத்தில் ஈடுபடவில்லை. ஆகவே அரசுக்கு உள்ள ஆயுத இருப்பு நெருக்கடி புலிகளுக்கும் இருக்க நியாயம் உண்டு. ஆகவே தன்னை இராணுவ ரீதியில் பலப்படுத்தும் அதேவேளை புலிகளுக்கான கடல்வழி ஆயுத விநியோகத்தை நிறுத்துவதற்கு கடலோரக் காவலைப் பலப்படுத்துவது அரசுக்கு இன்றியமையாத தேவை. ஆகவே இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டால் இருநாடுகளும் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். புலிகளின் கடல்வழி ஆயுத விநியோகத்தைத் தடுத்து நிறுத்த இருநாட்டு கடற்படையினரும் இணைந்து செயற்படலாம் என்று மனக்கணக்குப் போடுகிறது இலங்கை. இவ்வளவுக்கும் மேலதிகமாக அமெரிக்காவிலிருந்து கொள்முதலாகும் கப்பலும் கடற்படையுடன் இணைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;  ஆகவே இராணுவ ரீதியாக தன்னைப் பலப்படுத்தும் அதே கரிசனையை புலிகளை பலமிழக்கச் செய்ய வேண்டும் என்ற விடயத்திலும்; சந்திரிகா அரசு சரிசமனாகக் காட்டிவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;  புலிகளது இராணுவ பலம் அரச படையினரை விட அதிகமாக இருப்பதாலேயே அரசு இந்த பலச் சமநிலையை முந்தும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியிருப்பதற்கு முக்கிய காரணம். ஏனெனில் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் கடைசியாக - 2001 ஆம் ஆண்டு - அக்கினிச் சுவாலை படை நடவடிக்கை 72 மணிநேரத்தில் புலிகளால் முறியடிக்கப்பட்டமையும் 2000 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளத்தை புலிகள் கைப்பற்றியமையும் புலிகளது இராணுவ வளர்ச்சி குறித்து ஒயாத அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் தமது வான்படையின் தாக்குதல் வலுவால் புலிகளின் கள வெற்றிகளை நிறுத்துவது கடினம் என்ற யதார்த்தத்தையும் இடித்துக் கூறியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;  ஆகவே தமிழ் மக்கள் மீது இராணுவத் தீர்வைத் திணித்துவிடலாம் என்ற சிங்கள ஆட்சியாளர்களின் நீண்டகால நப்பாசைக்கு வரலாற்றில் இடமில்லை என்பது வெளிப்படை உண்மை. இன்று இலங்கையின் அரசியல் இராணுவ கட்டமைப்புக்கள் இரண்டிலுமே விடுதலைப்புலிகளே முடிவெடுக்கும் சக்திகளாக உள்ளனர் என்ற யதார்த்தத்தை சிங்களத் தலைமைகள் உணரவேண்டும். அதற்கு தற்போது அவர்கள் மத்தியில் இனப்பிரச்சினைத் தீர்வு தமிழ் மக்களின் அபிலாஷைகள் ஆகியவை தொடர்பாக நிலவும் அடிப்படைக் கோட்பாட்டில் மாற்றம் ஏற்படவேண்டுமே தவிர சொத்தித்தலைக்கு சோடனையை மாற்றிப் பயனில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;-தெய்வீகன்-&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11870784-111260750210455862?l=ankusam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ankusam.blogspot.com/feeds/111260750210455862/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11870784&amp;postID=111260750210455862' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111260750210455862'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111260750210455862'/><link rel='alternate' type='text/html' href='http://ankusam.blogspot.com/2005/04/blog-post_04.html' title='சொத்தித் தலைக்கு.....'/><author><name>தெய்வீகன்</name><uri>http://www.blogger.com/profile/16880283989260916474</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11870784.post-111251213941518235</id><published>2005-04-02T22:56:00.000-08:00</published><updated>2005-04-02T23:08:59.420-08:00</updated><title type='text'>அறிக்கையின் அடர்த்தியை உணருமா அரசு?</title><content type='html'>&lt;span style="color:#993300;"&gt;&lt;strong&gt;அறிக்கையின் அடர்த்தியை உணருமா அரசு?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#993300;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இம்முறை வழமைபோல அன்றி அடர்த்தியான அறிக்கை ஒன்றின்மூலம் பலமான செய்தியை சிங்கள தேசத்துக்கு அனுப்பியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தின் ஒவ்வொரு குடிமகன் முதலாக சர்வதேச சமூகமும் எதர்பார்த்த தலைவர் பிரபாகரனின் உரை இம்முறை சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு பேரிடியாகப்போய் இறங்கியுள்ளது. அதன் தாற்பரியத்தை சீர்தூக்கிப்பார்க்க வேண்டிய கட்டாயம் சிங்களதேசத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைமைகளுக்கும் ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் பிரபாகரன் தனது உரையின் அடிநாதமாக இரண்டு விடயங்களை வலியுறுத்தியுள்ளார். அவர் வலியுறுத்திய விடயங்களைத் தீர்ப்பதற்கு தனது உரையிலேயே வழியையும் கூறியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது சிங்கள அரசியல் அமைப்புகளும் அவற்றின் தலைமைகளும் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருபொழுதும் புரிந்துகொள்ளப் போவதில்லை. இது கடந்துவந்த எமது வரலாற்றுப்பாதையில் நாம் கண்ட உண்மை. ஆகவே ஜனாதிபதி சந்திரிகாவும் அவர் தலைமையில் கூட்டாட்சி அமைத்திருக்கும் கட்சிகளும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் மக்களின் மூலாதாரக் கோரிக்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை குறித்து, உங்களது கட்சிகளின் கொள்கை நிலைப்பாட்டினை அதிகாரபூர்வமாகப் பகிரங்கப்படுத்துமாறு புலிகள் கோரியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை பிரபாகரன் தனது உரையில் 'சிங்களப் பௌத்தப் பேரினவாதச் சகதிக்குட் புதைந்து கிடக்கும் அரசியல் அமைப்புகளும் அவற்றின் தலைமைகளும் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருபொழுதும் புரிந்துகொள்ளப் போவதில்லை. சிங்களத் தேசத்தின் பிரதான அரசியற் கட்சிகள் எவையுமே தமிழரின் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளைக்கூட அங்கீகரிக்கத் தயாராக இல்லை. வடகிழக்கு மாநிலமானது தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகம் என்பதையோ, தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனக் கட்டமைப்பைக்கொண்ட மக்கள் சமூகம் என்பதையோ தமிழீழ மக்களுக்குப் பிரிந்துசெல்லும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமையுண்டு என்பதையோ எந்தவொரு சிங்கள அரசியல் இயக்கமும் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை. ஜனாதிபதி சந்திரிகாவிடமும் அவர், கூட்டாட்சி அமைத்திருக்கும் கட்சிகளிடமும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிடமும் எமது விடுதலை இயக்கம் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறது. அதாவது, தமிழ் மக்களது இனப் பிரச்சினையின் அடிப்படைகள் குறித்து, அவர்களது மூலாதாரக் கோரிக்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை குறித்து, உங்களது கட்சிகளின் கொள்கை நிலைப்பாட்டினை அதிகாரபூர்வமாகப் பகிரங்கப்படுத்துங்கள்." என்று வலியுறுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;  இரண்டாவது பன்னெடுங்காலமாக சண்டையிட்டுச் சாவுகளை மட்டுமே பெறுபேறாகக்கண்டு வந்த இருதரப்பினரும் சமரசமாகப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு ஒரு சரியான - முறையான - அங்கீகரிக்கப்பட்ட - தக்க அனுசரணையுடன் கூடிய - நியாயமான மையப்புள்ளி கிடைத்துள்ளது. கடந்த காலங்களைப் போல சண்டையை நிறுத்தி பெரிய சாதனைகள் விட்டுக்கொடுப்புகள் எல்லாம் புரிந்து பேச்சுமேசைக்கு வரவேண்டிய பாரிய சவால்கள் எதுவும் இருதரப்பின் முன்பும் தற்போது இல்லை. அதாவது இடைக்காலத்தன்னாட்சி அதிகார சபை என்ற - பாதிக்கப்பட்ட மக்களுக்காக அந்த மக்களாலேயே முன்வைக்கப்பட்ட ஒரு இடைகால நிர்வாக அலகு யோசனையே அப்புள்ளி. அதனை அடிப்படையாகக் கொண்டு பேச்சுக்களை ஆரம்பிக்கவேண்டியதுதான் இன்றைய தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபற்றி பிரபாகரன் தனது உரையில் 'எமது மக்களின் அவசரமான வாழ்நிலைத் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய வகையில் இதன் கட்டமைப்பு நெறிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர் தாயகத்தில் மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, புனரமைப்பு, அபிவிருத்தி ஆகிய பணிகளைத் தாமதமின்றிச் செயற்றிறனுடன் நிறைவுசெய்ய வழிவகுக்கும் உருப்படியான அதிகாரங்களைக் கொண்டதாக இத்திட்டம் அமையப்பெற்றது. கால தாமதமின்றி, இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு தமிழர் தாயகத்தில் அமையப்பெறவேண்டுமென நாம் வலியுறுத்துவதற்கு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt; 'நீண்ட காலமாகத் தொடர்ந்த கொடிய போரினாற் பாதிக்கப்பட்ட எமது மக்கள் மிகவும் அவசரமான வாழ்நிலைத் தேவைகளையும் பாரிய மனிதாபிமானப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு நிற்கின்றார்கள். பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் அகதி முகாம்களில் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். போரினாற் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும் வழங்குவதற்கு உதவி வழங்கும் நாடுகள் பெருந்தொகையில் நிதி ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ளன. துன்பப்படும் எமது மக்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும் வழங்கவும் அழிவுற்ற தமிழர் தேசத்தை மீளக் கட்டியமைக்கவும் தகுந்த அதிகாரங்களுடன் வட-கிழக்கில் ஒர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு நிறுவப்படுதல் அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;போர்நிறுத்தம் செய்து, மூன்று ஆண்டு காலமாக அமைதி பேணி, ஆறு மாதங்கள் வரை பேச்சுக்களை நடத்தியபோதும் சமாதானத்தின் பலாபலன்கள் இன்னும் எமது மக்களைச் சென்றடையவில்லை. தாங்கமுடியாத அளவிற்கு அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளின் சுமை எமது மக்களை நசுக்கிவருகிறது. முதலில், உடனடியாகத் தமது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டவேண்டுமென்பதையே எமது மக்கள் ஆவலாக எதிர்பார்த்து நிற்கின்றார்கள். எனவேதான், நாம் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பித்து வெகு சீக்கிரமாக இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை நிறுவவேண்டுமென நாம் விரும்புகின்றோம்" என்று கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இந்த யதார்த்தத்தைப்புரிந்து அதன் அடிப்படையில் பேச்சுக்களை ஆரம்பிக்க புலிகள் வலியுறுத்ததி வருகின்றனர். இதனைத் தொடர்ச்சியாக மறுத்துக்கொண்டு காலத்தை இழுத்தடித்துக்கொண்டு நிரந்தரத் தீர்வுகுறித்துப் பேசவேண்டும் என்ற சம காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களை முன்வைத்துக்கொண்டு தமிழ் மக்களின் இலட்சிய மூச்சை அடக்கி விடுதலைத்தாகத்தை நிறுத்த போராட்டத்தின் குரல்வளையை நசுக்க ஜனாதிபதி சந்திரிகாவின் அதர்மவழி அட்டகாசங்களை இனியும் பொறுக்கமுடியாது. அவர்காட்டும் சூழ்ச்சி நிறைந்த பாதையில் தமிழ்மக்களைக் கூட்டிச் செல்ல புலிகள் தயாரில்லை. கடந்த காலங்களில் எத்தனையோ விட்டுக்கொடுப்புகளுடன் சிங்கள தேசத்தின் நிபந்தனைகளுக்கெல்லாம் இசைந்து சென்றதால் எமது மக்கள் பட்ட துயரம் போதும். இனியும் அந்த கறைபடிந்த வரலாறுவேண்டாம். தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ள வரைவின் அடிப்படையில் பேச்சுக்களை அரசு ஆரம்பிக்கவேண்டும். அரசு அதுற்கு இணங்காவிடின் சுதந்திரப்போர் தொடரும் என்று அரசுக்கு நெத்தியடியாக வெட்டு ஒன்று துண்டு இரண்டாக விடை கொடுத்திருக்கிறார் பிரபாகரன். இது குறித்த அவரது வரிகளில்,&lt;br /&gt;  'இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்கமுடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்காலச் சுபீட்சமின்றி சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளான. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம். இந்த நெருக்கடியான சூழ்நிலையிற் சிறீலங்கா அரசுக்கு நாம் அவசரமான அழைப்பு ஒன்றை விடுக்க விரும்புகின்றோம். அதாவது, நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையில், நிபந்தனையற்ற முறையில், காலந் தாமதிக்காது பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, காலத்தை இழுத்தடித்து, எமது மக்களின் துயர வாழ்வை நீடித்துச் செல்ல சிங்கள அரசு முற்படுமானால், நாம் எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;  மற்றும்படி பேச்சுக்களை ஆரம்பிக்க தீராத அசை உள்ளவர்போல் நிரந்தரத்தீர்வு குறித்தும்பேசவேண்டும் என்று அடிபட்டு விழுந்தவன் தண்ணி கேட்கையில் 'இல்லை! புரியாணிதான் தருவேன்" என்று கூறுவதைப்போல் எதிர்முனையில் நின்று அறிக்கை விடும் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆதங்கம்குறித்து பிரபாகரன் தெரிவிக்கையில்,&lt;br /&gt;  'தமிழரின் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவமும் பெருந்தன்மையும் மதிநுட்பமும் இல்லாத தென்னிலங்கை அரசியல் இயக்கங்கள் மத்தியில் ஒத்திசைவற்ற, ஒன்றுக்கொன்று மாறுபட்ட, முரண்பாடுகள் நிறைந்த கருத்துக்களையும் கொள்கைகளையுமே காணக்கூடியதாக இருக்கிறது. இப்படிக் குளறுபடியான கொள்கைகளை வரித்துக்கொண்டு, அப்பட்டமான இனவாதம் பேசும் கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமைவகிக்கும் சந்திரிகா அம்மையார், இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதுபற்றி அக்கறை காட்டுவது எமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;  'தென்னிலங்கை அரசியலரங்கில் தமிழரின் அடிப்படை அரசியல் அபிலாசைகள் குறித்துத் தெளிந்த பார்வையும் நேரிய தரிசனமும் ஒத்திசைவான நிலைப்பாடும் நிலவுமானால் எமது மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுபற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமுண்டு. அல்லாதபட்சத்தில், நிரந்தரத் தீர்வு குறித்துப் பேசுவதில் அர்த்தமில்லை. தமிழர் பிரச்சினை குறித்துப் பிளவுபட்டு, முரண்பட்டுக் குழம்பி நிற்கும் சிங்கள அரசியல் தலைமைகளிடமிருந்து எமது மக்களுக்கு நியாயமான நிரந்தரத் தீர்வு கிடைக்கப்போவதில்லை" என்று கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;  உலக நாடுகளுடம் ஓடி ஓடி பாதுகாப்பு ஒப்பந்தங்கள் பற்றிய பேச்சுக்களையும் ஆயுதக்கொள்வனவுகள் தொடர்பான பேச்சுக்களையும் மேற்கொண்டு இலங்கைப் பிரச்சினையை சர்வதேசமயப்படுத்தி புலிகளை அசையமுடியாத ஒரு இக்கட்டில் - சர்வதேசப் பாதுகாப்பு வலையில் - மாட்டிவிடும் முயற்சிகளுடன் தான் செயற்பட்டால் புலிகள் பயப்படக்கூடும். இந்த மறைமுக அழுத்தத்தின்பால் புலிகள் பேச்சை ஆரம்பிக்கும தமது நிலைப்பாட்டில் நெகிழ்ச்சிப்போக்கைக் காட்டவைக்கலாம்;: பிரபாவின் உரை யுத்தம் இல்லாத ஒரு உத்தரவாதத்தைத் தரும் என்றெல்லாம் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மனக்கணக்குப் போட்டிருக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;  ஆனால் தமிழன் எதற்கும் அஞ்சாதவன். புலிகள் எதையும் எதிர்கொள்ளத் தயங்காதவர்கள் என்ற அந்த உண்மையை புலிகளின் தலைவர் மாவீர்கள் முன்பாக சத்தியம் செய்து சிங்களதேசத்துக்கு இடித்துரைத்திருக்கிறார்.&lt;br /&gt;  தற்போது புலிகள் தரப்பில் முடிவு அறிவிக்கப்பட்டாயிற்று. பந்து தற்போது அரசின் பக்கம். அரசு அளிக்கப்போகும் பதிலில் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படப் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;  இனியொரு யுத்தம் வந்தால் நாடு தாங்குமா? துண்டு விழுந்த வரவு செலவுத் திட்டத்தை தட்டுத் தடுமாறி நிறைவேற்றுவதற்குள்ளேயே அரசுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. இந்நிலையில் அரசைத்தூக்கி நிறுத்த சரியான வழி யுத்தம்தானென்று ஜனாதிபதியும் அவரது கூட்டணிக்கட்சிகளும் கருதினால் அது விதி விட்ட வழி.&lt;br /&gt;&lt;br /&gt;  தலைவர் பிரபாகரனின் அறிக்கையின் அடர்த்தியை உணர்ந்து பேச்சு தொடர்பான அரசின் பிந்திய நிலைப்பாட்டை அறிய அடுத்தமாதம் இலங்கை வரவுள்ள நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் கொல்கெய்திடம் அரசு ஆரோக்கியமான பதிலை அளிக்குமா என்பது இன்று எழுந்துள்ள மில்லியன் டொலர் பெறுமதியான கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;  அரசு அமுலுக்குக்குக் கொண்டுவரவுள்ள மரணதண்டனை முறையால் முதலில் பலியாவது புரிந்துணர்வு ஒப்பந்தமாக இருக்கக் கூடாது என்பது அனைவரது அவா. அந்த மூன்று வயதுக்குழந்தையின் விதி இன்று அரசின் கையில்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11870784-111251213941518235?l=ankusam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ankusam.blogspot.com/feeds/111251213941518235/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11870784&amp;postID=111251213941518235' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111251213941518235'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111251213941518235'/><link rel='alternate' type='text/html' href='http://ankusam.blogspot.com/2005/04/blog-post_111251213941518235.html' title='அறிக்கையின் அடர்த்தியை உணருமா அரசு?'/><author><name>தெய்வீகன்</name><uri>http://www.blogger.com/profile/16880283989260916474</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11870784.post-111251070634926791</id><published>2005-04-02T22:17:00.000-08:00</published><updated>2005-04-02T22:45:06.353-08:00</updated><title type='text'>வான்புலிகள்...</title><content type='html'>&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;வான்புலிகள் விவகாரத்தை ஊதிப்பெருப்பிக்கும்அரசாங்கத்தின் பின்னணி என்ன?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளிடம் வான்படை உள்ள விவகாரத்தை கிளறிக் கிளறிக் கிலி கொண்டுவருகிறது சந்திரிகா அரசு. பேச்சு பேச்சு என்று பேசிய படியே இருக்க இன்னொரு பக்கத்தால் புலிகள் தம்மைப்பலப்படுத்த ஒருபடி மேலே செல்கிறார்களே என்று சதா அச்சத்திலேயே மிரண்டுபோயுள்ளது அரசு.&lt;br /&gt;வான் கரும்புலிகள் என்ற புதிய பிரிவைப் புலிகள் தோற்றுவித்துப் பயிற்சி கொடுத்துவருகின்றார்கள் என்று அண்மையில் புலனாய்வுத்துறை அரசுக்கு எச்சரிக்கை செய்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;  இந்த எச்சரிக்கை அரசு மற்றும் பாதுகாப்பு உயர் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பிவிட்டிருக் கின்றது.&lt;br /&gt;  'தாம் இப்போது புதிதாக தோற்றுவித்திருக்கும் வான் கரும்புலிகளுக்குப் புலிகள் வன்னிக் காட்டில் எங்கோ ஓரிடத்தில் பயிற்சி கொடுத்து வருகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;  புலிகள் இயக்கத்தில் கடற்கரும்புலிகள், தரைக்கரும்புலிகள் போன்று வான் கரும்புலிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;  விடுதலைப் புலிகள் புதிதாகச் சுவீகரித்துக் கொண்டிருக்கும் ~மைக்ரோ விமானங்கள் மூலம் இந்த வான் கரும்புலிகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;  மண் மற்றும் மாதிரிகளை இலக்குவைத்து இப்பயிற்சிகள் நடைபெறுகின்றன. அதை நோக்கும்போது கொழும்பில் கேந்திர நிலைகளை அல்லது மிக முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து இப்பயிற்சிகள் நடக்கக்கூடும் எனக் கருதமுடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;  இந்த வகையில், முக்கிய அரசியல் தலைவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உட்படப் பலரும் இலக்கு வைக்கப்படலாம்.&lt;br /&gt;  இந்தவகைத் தாக்குதலின்போது கரும்புலிகள், தற்கொலைத் தாக்குதலுக்கான அங்கிகளை அணிந்திருப்பது மட்டுமல்லாமல் ~மைக்ரோ வான்கலம் நிறைய வெடிகுண்டுகளை நிரப்பிக் கொண்டுவந்து இலக்குகளை இலக்குவைத்து மோத முயலக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;  பொதுக்கூட்டம் ஒன்றில் முக்கிய பிரமுகர் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருக்கையில் அவரது மேடையை இலக்குவைத்து வெடிகுண்டுகள் நிரப்பிய ‘மைக்ரோ விமானத்தைச் செலுத்தி அதை மேடையுடன் மோதவைத்துத் தாக்குதல் நடத்துவது குறித்தும் பயிற்சியளிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது." இவ்வாறு புலனாய்வு வட்டாரங்கள் அரச மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகளை எச்சரித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;  இதேபோலவே ஒரு சில மாதங்களுக்கு முன்னர் முல்லைத்துPவுக் கடற்பரப்பிலிருந்து கடற்படையினர் அனுப்பிய தகவலால் அரசு அருண்டு மிரண்டு அல்லோல கல்லோலப்பட்டது. அதாவது புலிகளினது என்று கருதப்படும் விமான நகர்வு தங்கள் ராடர் திரையில் விழுந்ததாகவும், முல்லைத்தீவுக் கடற்கரையிலிருந்து சுமார் 12 கடல்மைல் தொலைவில் வானில் மர்மக்கலம் ஒன்று வேகமாக நகர்ந்ததை தமது ராடரில் விழுந்ததாகவும் கூறிய கடற்படையினர் அந்தக்கலம் தரையை நோக்கி இறங்கியவுடன் தமது ராடர் புல எல்லையை விட்டுமறைந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;  இந்தக்கலம் கெலிக்கொபடர் அல்லது செஸ்னா ரக விமானத்தின் வழக்கமான வேகமான 150 கடல் மைல் வேகத்திலேயே சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடற்படையினர் ஏதோ ஒரு வான்கலத்தைக் கண்டதாக்கூறும் அவ்வேளையில் தமது வான்கலங்கள் எதுவும் வானில் பறக்கவில்லை என்று அப்போது விமானப்படையினர் உறுதி செய்திருந்தனர்.&lt;br /&gt;  இந்தத் தகவல்களைக் கொண்டு விடயத்தை ஊதிப்பெருப்பிக்க எண்ணிய ஜனாதிபதி, புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனைச் சந்திக்கச் சென்ற கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் பாதுகாப்பு அமைச்சின் செயலர் சிறில் கேரத் ஊடாக அப்போது புலிகளுக்கு ஒரு தகவலை அனுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;  இதனை தமிழ்ச்செல்வனுடனான சந்திப்பில் முன்வைத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் 'உங்களிடம் விமான ஓடுபாதை உண்டு என்பது எமக்குத் தெரியும்" என்றார். இதேவேளை கணகாணிப்புக் குழுத் தலைவர் இந்தச் சந்திப்புக்கு கெலி மூலம் வன்னிக்குச் செல்கையில் அந்தக் கெலியை ஓட்டிச்சென்ற விமானியே இரணைமடுக்குளத்துக்கு மேலாகச் சற்றுச் சென்று புலிகளின் விமான ஓடுபதையைக் காண்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;  ஆனால் கண்காணிப்புக் குழுத் தலைவரின் தகவலால் கிஞ்சித்தும் தயக்கமின்றி அப்போது பதிலளித்திருந்த தமிழ்ச்செல்வன் 'எம்மிடம் விமான ஓடுபாதை உள்ளது என்று அரசுக்குத் தெரியும் என்றும் எமக்குத் தெரியும்" என்று பதிலளித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;  இதேவேளை யுத்த நிறுத்த காலத்தில் சர்வதேச கடற்பரப்பில் வைத்து புலிகளின் வணிகக்கப்பல் கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டபோது அதில் வந்த புலி உறுப்பினர்கள் வெளிநாட்டில் போய் விமானப்பயிற்சி பெற்றுவிட்டு வந்தவர்கள் என்ற வெளியான தகவலை அடுத்தும் ஜனாதிபதி சந்திரிகா பாதுகாப்புத் தரப்பினரை உசார்படுத்தியது மட்டுமன்றி விசேட பாதுகாப்பு மாநாட்டைக்கூட்டி முக்கிய தளபதிகளுடன் பல முன்பாதுபாப்பு ஆலோசனைகள் பற்றி ஆராய்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;  புலிகள் என்ன வகையான வான்கலத்தை வைத்திருக்கக்கூடும்? ஆவற்றின் செயற்றிறன் என்ன? அவற்றால் தமக்கு ஏற்படக்கூடிய ஆபத்து என்ன? புலிகளின் வான்கலத்தால் தமக்கு ஆபத்து ஏற்பட்டால் தாம் மேற்டிகாள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? என்பவை குறித்தெல்லாம் ஆராய்ந்திருந்தார். இப்படி காலத்துக்குக்காலம் வான்புலிகள் விவகாரத்தை ஊதிவிடும் அரசுக்கு அதுபற்றிய விவரம் புதியதா என்றால் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;  1994 இல் பதவியேற்ற ஜனாதிபதி புலிகளிடம் வாண்ஊர்திகள் உண்டா எனபதை அறிய தனது தளபதிகளை வடக்கு கிழக்கு எங்கும் மோப்பநாய்களாக விரட்டிவிட்டிருந்தார். ஆனால் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. ஆனால் புலிகள் கடல் வழியாக விமான உதிரிப்பாகங்களைக் கொண்டு வந்து வன்னியில் வைத்த அவற்றை முழுமைப்படுத்தி பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள் என்று 1998 இல் அப்போது பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருந்தவரும் ஜனாதிபதியின் மாமனாருமான அனுருத்த ரத்வத்தைக்கு புலனாய்வுப்பிரிவின் மூலம் தகவல் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;  கெலிக்கொப்டர்களைத் தான் புலிகள் உதிரிகளாகக் கொண்டு வந்துள்ளார்கள் என்று 1998 ஒக்டோபரில் தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்பு அமைச்சு உசாரானது. உயர்மட்ட ஆலோசனை நடத்தியது. விமானப்படை நிபுணர்கள் குழு ஒன்றை பலாலிக்கு அனுப்பியது. அவர்களும் புலிகள் வான் கலம் ஏதோ ஒன்றை புலிகள் கொண்டுவந்து சேர்த்துவிட்டார்கள் என்பதை ஊர்ஜிதம் செய்யமுடிந்ததே தவிர அது எந்த வகையானது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;  மன்னார்க் கரையிலிருந்து 12 கடல்மைல் தொலைவில் பீரங்கிப்படகிலிருந்து பதிவு செய்த புலிகளின் பகுதியிலிருந்து வந்த ஒருவகையான ஒலியை வைத்தே புலனாய்வுப்பிரிவினரும் இவ்வாறான ஒரு தகவலை பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;  புலிகளிடம் இருப்பது எந்த ரக வான்கலம் என்ற கடைசிவரை தெரியாமல் தலையைப்பிய்த்த விசாரணைக்குழுவினர் ஈற்றில் பதிவு செய்த அந்த ஒலியை வைத்து புலிகளிடம் இருப்பது இரண்டுபேர் மட்டும் பயணம் செய்யக்கூடிய ரொபின்ஸன்-44 ரக கெலிக்கொப்டர் என்ற எடுகோளுக்கு வந்தனர். இதையடுத்து வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து முக்கிய இராணுவத்தளங்கள் ஆயுதக்கிடங்குகள் உள்ள பகுதிகள் அனைத்து இடங்களினதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. அங்கெல்லாம் அண்ணாந்து பார்த்தபடியே கொஞ்சப்படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;  கொஞ்சக்காலம் அல்லோலகல்லோலப்பட்ட ரத்வத்தையின் படையினர் பின்னர் கதையை ஆறப்போட்டனர். பின்னர் சண்டையின்போது எறிகணைவீச்சு மூலம் புலிகளின் விமான ஓடுபாதை அழிக்கப்பட்டதாக ரத்வத்தை அறிக்கை விட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;  புலிகள் அமைப்பைப் பொறுத்தவரை அது இன்று மாபெரும் வளர்ச்சியைக் கண்டுள்ள மரபுவழி இராணுவம். உலகத்திலேயே கடற்படையைத் தன்னகத்தே கொண்டுள்ள புரட்சி அமைப்பு என்ற படிகளையெல்லாம் தாண்டி இன்று பல்வேறு துறைகளிலும் தன்னிறைவை எட்டிவரும் அமைப்பு. தமது கட்டுப்பாட்டு; பிரதேசத்தில் அவர்கள் மேற்கொண்டு வரும் பல்வேறு கட்டமைப்புக்களும் அந்த யதார்த்தத்தையே சான்று பகர்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;  ஆனால் இவற்றையெல்லாம் பல தடைவைகள் சுட்டிக்காட்டி புலிகள் தனிநாட்டுக்கான வழிவகைகளை மேற்கொண்டுவருவதாக கூவிக்குழறி வந்த சிங்கள அரசு புலிகளின் இந்த முயற்சிகளின் மீது 'சரியான சில வழிகளின்" ஊடாக அழுத்தங்களை மேற்கொள்ளவே தற்போது முயன்று வருகிறது. அரசின் அந்தத்திட்டத்தின் வெளிப்பாடே வான்புலிகள் விவகாரத்தை ஊதிப்பெருப்பித்து அதைக் காட்சியாக்கும் நோக்கமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;  இலங்கை அரசைப்போலவே புலிகள் என்றால் கீரியைக் கண்ட பாம்பு போல நிற்கின்ற இந்தியாவைப் பொறுத்தவரை அது இலங்கையை விட இலங்கையின் இறைமை ஆட்புல ஒருமைப்பாடு என்ற விடயங்களில் காரணத்தோடு கரிசனை காட்டிவரும் ஒரு நாடு.&lt;br /&gt;&lt;br /&gt;  அங்கு மத்திய அரசில் கொள்ளை வகுப்பாளர்கள் என்று தம்மைக் கூறிக்கொண்டிருக்கின்ற பிராமணிய மேதாவிகள் சிலர் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நாசுக்காக மேற்கொண்டு வருவதில் வல்லவர்கள். அவர்களில் ஒருவரான தற்போதைய இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் அலோசகரும் இலங்கைக்கான முன்னாள் தூதுவருமான டிக்சித் இலங்கை விகாரத்தை மிக நுணுக்கமாகக் கண்காணித்து வருபவர்.&lt;br /&gt;&lt;br /&gt;  இந்தியாவை நேச சக்தியாகக் கொண்டு அதன் ஒத்தாசையுடன் ஈழப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வரும்புவதாக புலிகள் தெரித்த கருத்துக்கள் தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், புலிகள் முதலில் தமது கடற்புலிகள் அமைப்பைக் கலைக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.&lt;br /&gt;  இதை இங்கு குறிப்பிடும் காரணம் என்னவென்றால் தமக்கு மிக அருகில் ஒரு தனிநாட்டுக்கான கட்டமைப்புக்கள் வேகமாக வளர்ச்சி கண்டுவருவதை இந்தியா விரும்பவில்லை. அதுவும் ஒரு படைக்கட்டமைப்பே உருவாகிவிட்டால் தமது கதி என்ன? என்ற அச்சத்தின் எதிரொலிதான் இந்தியாவின் இந்த அலறல் குழறல் எல்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;  ஜனாதிபதி சந்திரிகாவின் வேலையெல்லாம் என்னவெனில் இந்தியா மட்டுமல்ல சர்வதேச சமூகமும் புலிகள் ஒரு இராணுவ அமைப்பாக வளர்ந்துவருகிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது என்பதற்காக காலத்துக்குக் காலம் இப்படியான வான்புலிகள் விவகாரம் வெளிநாட்டுத் தூதுவர்கள் மீது தாக்குதல் போன்ற சோடித்த கதைகளால் அறிக்கை விடுவதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்களால் பயங்கரவாதிகள் என்ற பட்டியலில் அடக்கப்பட்டுள்ள ஒரு அமைப்பு விமானப்படை வைத்திருக்குமளவுக்கு வந்துவிட்டதா என்ற ஒரு சீற்றத்தை உலகநாடுகள் மத்தியில் கிளறிவிடும் அரசின் முயற்சி எவ்வளவு தூரம் பலிக்கும் என்பது சந்தேகமே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11870784-111251070634926791?l=ankusam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ankusam.blogspot.com/feeds/111251070634926791/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11870784&amp;postID=111251070634926791' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111251070634926791'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111251070634926791'/><link rel='alternate' type='text/html' href='http://ankusam.blogspot.com/2005/04/blog-post_02.html' title='வான்புலிகள்...'/><author><name>தெய்வீகன்</name><uri>http://www.blogger.com/profile/16880283989260916474</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11870784.post-111243848053470484</id><published>2005-04-02T02:38:00.000-08:00</published><updated>2005-04-03T07:49:50.323-07:00</updated><title type='text'>வணக்கம்!</title><content type='html'>வணக்கம் அன்பர்களே!&lt;br /&gt;அங்குசப் பக்கத்தில் என் அரசியற் கட்டுரைகளை வலையேற்ற எண்ணியுள்ளேன். உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;-தெய்வீகன்.-&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11870784-111243848053470484?l=ankusam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ankusam.blogspot.com/feeds/111243848053470484/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11870784&amp;postID=111243848053470484' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111243848053470484'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11870784/posts/default/111243848053470484'/><link rel='alternate' type='text/html' href='http://ankusam.blogspot.com/2005/04/blog-post.html' title='வணக்கம்!'/><author><name>தெய்வீகன்</name><uri>http://www.blogger.com/profile/16880283989260916474</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry></feed>
